search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருச்சி அருகே கார் மோதி விவசாயி பலி
    X

    திருச்சி அருகே கார் மோதி விவசாயி பலி

    திருச்சி அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார்.
    காட்டுப்புத்தூர்:

    திருச்சி மாவட்டம் தொட் டியம்  அருகே உள்ள கூண்டு ரங்கம்பட்டியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 60). வாழை விவசாயியான இவர் வாழைத்தார் வியாபாரமும் செய்து வந்தார். நேற்று இவர் தனது மோட்டார் சைக்கிளில் விற்பனைக்காக வாழைத்தார்களை ஏற்றிக் கொண்டு கூண்டு ரங்கம்பட்டியில் இருந்து தொட்டியத்திற்கு சென்றார்.

    தொட்டியம் மாதா பள்ளி அருகே திருச்சி-நாமக்கல் சாலையில் செல்லும்போது திடீரென சாலையில் திரும்ப முயன்றார். அப்போது பின்னால் வந்த கார் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட கிருஷ்ணமூர்த்தி பலத்த காயமடைந்தார். உடனே அவரை பொதுமக்கள் மீட்டு திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி கிருஷ்ணமூர்த்தி இறந்தார்.
     
    இந்த விபத்து குறித்து தொட்டியம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் விசாரணை நடத்தி கார் டிரைவர் திருச்சி வாத்தலை கரியமாணிக்கத்தை சேர்ந்த விமல்ராஜ்  (32) என்பவரை கைது செய்தனர்.
    Next Story
    ×