search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விஷம் குடித்து அரிசி ஆலை உரிமையாளர் தற்கொலை
    X

    விஷம் குடித்து அரிசி ஆலை உரிமையாளர் தற்கொலை

    புதுக்கோட்டை அருகே அரிசி ஆலை உரிமையாளர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    அன்னவாசல்:

    புதுக்கோட்டை அம்பாள்புரம் 4-வது வீதியை சேர்ந்தவர் சிங்கமுத்து (வயது 60). இவர் வயலோகத்தில் கோவில் வீதியில் அரிசி ஆலை நடத்தி வந்தார். இவருக்கு தொழிலில் அதிக அளவில் கடன் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த நிலையில் காணப்பட்டார்.

    இந்நிலையில், நேற்று முன்தினம் காலை பொதுமக்கள் அந்த அரிசி ஆலை உள்ளே பார்த்த போது, அங்கு சிங்கமுத்து விஷம் குடித்து இறந்து கிடந்தார். இதையடுத்து பொதுமக்கள் அன்னவாசல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிங்கமுத்துவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக இலுப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
    Next Story
    ×