search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்துகளை தடுக்க டிரைவர்களுக்கு தேநீர் வழங்கிய போலீசார்
    X

    விபத்துகளை தடுக்க டிரைவர்களுக்கு தேநீர் வழங்கிய போலீசார்

    வாகனங்களை ஓட்டி வரும் டிரைவர்களின் சோர்வை குறைக்கும் வகையில் தேநீர் வழங்கி புத்துணர்ச்சி ஏற்படுத்தி பின்னர் வாகனங்களை இயக்க அறிவுறுத்தப்பட்டு விபத்து தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் ஆணைக்கிணங்க ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு கென்னடி ஆலோசனையின் பேரில், போலீசார் மற்றும் போக்குவரத்து போலீசார் சார்பில் சாலை விபத்துகளை தடுக்கும் வகையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக தா.பழூர் போலீசார் மற்றும் போக்குவரத்து போலீசார் சார்பில் தா.பழூர் கடைவீதியில் நள்ளிரவுக்கு மேல் வரும் அனைத்து கனரக, இலகுரக மற்றும் இரு சக்கர வாகனங்களை ஓட்டி வரும் டிரைவர்களின் சோர்வை குறைக்கும் வகையில், அவர்களை முகத்தினை கழுவ செய்து தேநீர் வழங்கி புத்துணர்ச்சி ஏற்படுத்தி பின்னர் வாகனங்களை இயக்க அறிவுறுத்தப்பட்டு விபத்து தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    குறிப்பாக பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அதிகப்படியான வாகனங்கள் சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு செல்ல வேண்டியிருப்பதாலும், மீண்டும் ஊரிலிருந்து சென்னை உள்ளிட்ட வெளியூர் செல்ல இருப்பதாலும் அதன் ஓட்டுனர்களுக்கு சோர்வை நீக்கும் வகையில் நள்ளிரவுக்கு மேல் வரும் வாகனங்களை நிறுத்தி அவர்களின் முகங்களை கழுவ செய்து தேநீர் வழங்கி புத்துணர்ச்சி ஏற்படுத்தி விபத்து தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் தா.பழூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வகுமாரி, போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர்கள் தினேஷ்குமார், ராமதாஸ் உள்பட போலீசார் கலந்துகொண்டு விபத்து தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள டிரைவர்களிடம் அறிவுரை வழங்கினர்.

    போலீசாரின் இத்தகைய செயலைக்கண்டு டிரைவர்கள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் வியந்தனர். மேலும் இதேபோல் ஜெயங்கொண்டம், ஆண்டிமடம், மீன்சுருட்டி, உடையார்பாளையம் உள்ளிட்ட ஜெயங்கொண்டம் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளிலும் விபத்து தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 
    Next Story
    ×