search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வத்தலக்குண்டு அருகே பொங்கல் விழாவில் கோஷ்டி மோதல்
    X

    வத்தலக்குண்டு அருகே பொங்கல் விழாவில் கோஷ்டி மோதல்

    வத்தலக்குண்டு அருகே பொங்கல் விழாவில் கோஷ்டி மோதல் ஏற்பட்டது. இருதரப்பை சேர்ந்த 9 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    வத்தலக்குண்டு:

    வத்தலக்குண்டு பகுதியில் பொங்கலையொட்டி பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. மாட்டுபொங்கல் தினத்தன்று பல்வேறு தோரணங்கள், வர்ணம் பூசுதல், கொடி கட்டுதல் மற்றும் பல்வேறு போட்டிகளும் நடைபெற்றன.

    இதற்காக அந்தந்த பகுதியில் இளைஞர்கள் ஏற்பாடுகளை செய்தனர். ஜி.தும்மலப்பட்டியில் பொங்கல் விழாவிற்காக வர்ணம் பூசும் பணியில் சிலர் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த இடம் தங்களுக்கு சொந்தமானது. இங்கு வரையக்கூடாது என மற்றொரு தரப்பினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    வாக்குவாதம் முற்றவே இருதரப்பினர் பயங்கரமாக மோதிக்கொண்டனர். இதுகுறித்து வத்தலக்குண்டு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் விரைந்து வந்து இருதரப்பை சேர்ந்த அசோக்(19), ரமேஷ்(22), ராஜேஷ்(22), விக்னேஷ்(22), வசந்த்(20) உள்பட 9 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    Next Story
    ×