search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இரணியல் அருகே டெம்போ டிரைவர் வீட்டில் 1¾ பவுன் நகை திருட்டு
    X

    இரணியல் அருகே டெம்போ டிரைவர் வீட்டில் 1¾ பவுன் நகை திருட்டு

    இரணியல் அருகே டெம்போ டிரைவர் வீட்டில் பீரோவில் இருந்த 1¾ பவுன் நகையை கொள்ளையர்கள் திருடி சென்று விட்டனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவிலை அடுத்த களியங்காடு வட்டப்பாறை பகுதியை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 34). இவர் டெம்போ டிரைவராக உள்ளார்.

    சம்பவத்தன்று இரவு குடும்பத்துடன் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார். காலையில் எழுந்து பார்த்த போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் வீட்டில் இருந்த பீரோவும் உடைக்கப்பட்டு அதில் இருந்த பொருட்களும் சிதறிக் கிடந்தது.

    அங்கு சென்று பார்த்த போது பீரோவில் இருந்த ஒரு பவுன் செயின் ஒன்று, ¾ பவுனில் ஒரு ஜோடி கம்மல் ஆகியவற்றை வீடு புகுந்து கொள்ளையடித்துச் சென்று இருப்பது தெரிய வந்தது.

    இது குறித்து இரணியல் போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் ஞானசிகாமணி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற் கொண்டனர்.

    மேலும் கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் பூட்டு உடைக்கப்பட்ட இடம் மற்றும் பீரோக்களில் கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர். மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது. வீட்டில் இருந்து மோப்பம் பிடித்து சிறிது தூரம் ஓடிச் சென்று நின்றது.

    வீட்டில் ஆட்கள் தூங்கிக் கொண்டு இருக்கும்போதே இந்த கொள்ளைச் சம்பவம் நடந்திருப்பது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. போலீசார் அந்த பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். மேலும் அங்கு கண்காணிப்பு காமிராக்கள் உள்ளதா? அதில் கொள்ளையர்களின் உருவம் பதிவாகி உள்ளதா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×