என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வாலாஜா அருகே சுவரை இடித்து வீட்டுக்குள் லாரி புகுந்தது- தொழிலாளி பலி
Byமாலை மலர்17 Jan 2019 11:50 AM GMT (Updated: 17 Jan 2019 11:50 AM GMT)
வாலாஜா அருகே மணல் லாரி கட்டுப்பாட்டை இழந்து வீட்டு சுவரை இடித்து தள்ளி கவிழ்ந்த விபத்தில் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
வாலாஜா:
வாலாஜா அருகே உள்ள எடகுப்பம் வள்ளுவம்பாக்கம் ரோட்டை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது 37). கூலிதொழிலாளி. இவர் நேற்றிரவு வீட்டின் வாசலில் படுத்து தூங்கி கொண்டிருந்தார்.
நள்ளிரவு அவரது வீட்டின் வழியாக சென்ற மணல் லாரி ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து ராதாகிருஷ்ணன் வீட்டின் காம்பவுண்ட் சுவரை இடித்து தள்ளி கவிழ்ந்தது. அப்போது காம்பவுண்ட்சுவர் இடிந்து படுத்திருந்த ராதாகிருஷ்ணன் மீது விழுந்தது. இதில் அவர் பலத்தகாயமடைந்தார்.
அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த உறவினர்கள் அவரை மீட்டு வாலாஜா அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் வேலூர் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
அங்கு ராதாகிருஷ்ணன் சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து வாலாஜா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X