search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவட்டார் அருகே தொழிலாளி தீக்குளித்து தற்கொலை
    X

    திருவட்டார் அருகே தொழிலாளி தீக்குளித்து தற்கொலை

    திருவட்டார் அருகே நோய் குணமாகாததால் மன வருத்தத்தில் இருந்த தொழிலாளி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
    நாகர்கோவில்:

    திருவட்டாரை அடுத்த வியனூர் முளவிளை பகுதியை சேர்ந்தவர் கனகராஜ். இவரது மகன் ஏசுராஜ் (வயது 23). தொழிலாளி.

    இவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தார். எனினும் அவருக்கு நோய் குணமாகவில்லை. இதனால் மன வருத்தத்துடன் காணப்பட்டு வந்த ஏசுராஜ் கடந்த 13-ந்தேதி உடலில் மண்எண்ணை ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.

    இதில் அவரது உடல் முழுவதும் தீ பரவியது. அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் அங்கு வந்தனர். அவர்கள் ஏசுராஜ் மீது எரிந்த தீயை அணைத்து, நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ஏசுராஜ் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து திருவட்டார் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    Next Story
    ×