search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராயப்பேட்டையில் ரவுடி சைக்கோ விமல் கைது
    X

    ராயப்பேட்டையில் ரவுடி சைக்கோ விமல் கைது

    ராயப்பேட்டையில் ரவுடி சைக்கோ விமலை கைது செய்த போலீசார் விசாரணைக்கு பின்னர் அவனை சிறையில் அடைக்க முடிவு செய்துள்ளனர்.
    சென்னை:

    ராயப்பேட்டை செல்லம்மாள் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் சைக்கோ விமல். அப்பகுதியில் பிரபலமான ரவுடியான இவனை போலீசார் தேடி வந்தனர்.

    கடந்த மாதம் அப்பகுதியை சேர்ந்த வேதகிரி என்பவரிடம் 2 செல்போன்களை பறித்த வழக்கில் ஐஸ்அவுஸ் போலீசார் சைக்கோ விமலை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று ராயப்பேட்டை பகுதியில் பதுங்கி இருந்த அவன் போலீசில் சிக்கினான். விசாரணைக்கு பின்னர் விமலை சிறையில் அடைக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

    கடந்த மாதம் அவனது வீட்டில் பதுங்கி இருந்த சைக்கோ விமலை, கோட்டூர்புரம் போலீஸ் ஏட்டு தியாகராஜன் பிடிக்க சென்றார். அப்போது சட்டையை போட்டுவிட்டு வருவதாக கூறி வீட்டுக்குள் சென்று கத்தியை எடுத்து வந்து சரமாரியாக குத்தினான்.

    இந்த வழக்கில் அப்போது அவன் கைது செய்யப்பட்டான். அதன்பிறகு பல்வேறு குற்ற வழக்குகளில் அவன் ஈடுபட்டு வந்ததும் குறிப்பிடத்தக்கது.



    Next Story
    ×