என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
செக்கானூரணி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலி
பேரையூர்:
மதுரை செக்கானூரணி அருகே உள்ள பேங்கல் பட்டியைச் சேர்ந்தவர் பதினெட்டாம்படி மகன் அழகுபாண்டி (வயது 18). இவரும் அதே பகுதியைச் சேர்ந்த கணேசன் மகன் கண்ணன் (18), முருகன் மகன் விமல் (18) ஆகிய 3 பேர் நேற்று மோட்டார் சைக்கிளில் வெளியே புறப்பட்டனர்.
செக்கானூரணி அருகே உள்ள கிண்ணிமங்கலம் மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்த பேது ரோட்டோரத்தில் இருந்த பெயர் பலகையின் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர்.
படுகாயம் அடைந்த அவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களின் நிலைமை மோசமானதால் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் வழியிலேயே அழகு பாண்டி பரிதாபமாக இறந்தார். மற்ற 2 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதேபோல் திருமங்கலம் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் ரஞ்சிதம் (வயது 80). இவர் நேற்று மாலை கடைக்குச் செல்வதற்காக வீட்டின் அருகே உள்ள மெயின் ரோட்டை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ் அவர் மீது மோதியது. இதில் ரஞ்சிதம் சம்பவ இடத்திலேயே பலியானார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்