search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உடன்குடி அருகே மினிபஸ்-கார் மோதி வாலிபர் பலி
    X

    உடன்குடி அருகே மினிபஸ்-கார் மோதி வாலிபர் பலி

    உடன்குடி அருகே கார் மீது மினிபஸ் பயங்கரமாக மோதிய விபத்தில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

    உடன்குடி:

    உடன்குடி அருகே உள்ள குலசேகரன்பட்டிணம் கருங்காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மாடசாமி. இவரது மகன் மகராஜா (வயது 28). இவர் சோப்பு, பிஸ்கட் உள்ளிட்ட பொருட்களை ஏஜென்சி எடுத்து விற்பனை செய்து வந்தார்.

    இந்நிலையில் நேற்று பொங்கலை முன்னிட்டு பொருட்கள் வாங்குவதற்காக தனது காரில் உடன்குடிக்கு சென்றார். அவருடன் அவரது நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த கூடலிங்கம் (27), சுந்தர் (27), முத்துராமலிங்கம் (27) ஆகியோரும் சென்றனர். காரை மகராஜா ஓட்டி சென்றார். இவர்கள் பொருட்களை வாங்கி விட்டு குலசை நோக்கி வந்து கொண்டிருந்தனர். அப்போது மணப்பாட்டில் இருந்து உடன்குடிக்கு சென்ற ஒரு மினிபஸ், கார் மீது பயங்கரமாக மோதியது.

    இதில் மகராஜா, கூடலிங்கம், சுந்தர். முத்துராமலிங்கம் மற்றும் மினிபஸ் டிரைவரான மெஞ்ஞானபுரம் அருகே உள்ள தாய்விளையை சேர்ந்த முத்துராமலிங்கம் ஆகியோர் படுகாயமடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்தனர். 

    இது குறித்து தகவலறிந்த குலசேகரன்பட்டிணம் இன்ஸ்பெக்டர் அண்ணாத் துரை மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே மகராஜா பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற 4 பேருக்கும் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×