search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நத்தம் அருகே டிரைவர் வீட்டில் நகை-பணம் கொள்ளை
    X

    நத்தம் அருகே டிரைவர் வீட்டில் நகை-பணம் கொள்ளை

    நத்தம் அருகே அரசு பஸ் டிரைவர் வீட்டில் நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
    நத்தம்:

    நத்தம் அண்ணாநகரை சேந்தவர் வேலவன் (வயது45). இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். தைப்பொங்கலை முன்னிட்டு தனது குடும்பத்துடன் குலதெய்வ சாமி கும்பிட சென்று விட்டார். இதனை நோட்டமிட்டு மர்மநபர்கள் இவரது வீட்டிற்குள் புகுந்தனர்.

    வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பீரோவை உடைக்க முயன்றனர். ஆனால் அது முடியாமல் போகவே மாடியில் உள்ள அறைக்கு சென்றனர். அங்குள்ள பீரோவை உடைத்து அதில் இருந்து 17½ பவுன் தங்க நகை மற்றும் ரூ.1½ லட்சம் ரொக்க பணத்தை கொள்ளையடித்தனர்.

    மேலும் அதே பகுதியில் உள்ள புகழேந்தி என்பவரது வீட்டிற்குள்ளும் நுழைந்து கொள்ளையடிக்க முயன்றனர். பீரோ லாக்கரை தூக்கி சென்று வெளியில் வைத்து உடைத்து பார்த்ததில் அதில் எதுவும் சிக்காததால் ஏமாற்றம் அடைந்தனர்.

    ஊருக்கு சென்று திரும்பிய வேலவன் தனது மாடி வீட்டின் பீரோ உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் நகை, பணம் கொள்ளை போனதை கண்டு அதிர்ச்சி அடைந்து நத்தம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். டி.எஸ்.பி. வினோத் தலைமையில் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். மோப்பநாய் லிண்டா வரவழைக்கப்பட்டது. மேலும் தடையவியல் நிபுணர்கள் வந்து முக்கிய தடயங்களை சேகரித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×