search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பழனி கோவிலுக்கு வந்த தஞ்சாவூர் பக்தர் மாரடைப்பால் மரணம்
    X

    பழனி கோவிலுக்கு வந்த தஞ்சாவூர் பக்தர் மாரடைப்பால் மரணம்

    பழனி கோவிலுக்கு வந்த தஞ்சாவூர் பக்தர் மாரடைப்பால் மரணமடைந்தார்.
    பழனி:

    தஞ்சாவூரை சேர்ந்தவர் தனசேகரன் (வயது40). முருகபக்தரான இவர் நேற்று பழனி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தார். நேற்று இரவு மலைக்கோவிலில் தங்கரத புறப்பாட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.

    அதன்பின்னர் கோவில் அருகே நின்று செல்பி எடுத்துக்கொண்டு கீழே இறங்கினார். படிப்பாதை வழியாக வந்துகொண்டிருந்தபோது திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. உடனே அவர் மயங்கி விழுந்தார்.

    அருகில் இருந்த பக்தர்கள் அவரை தூக்கி ஆம்புலன்சில் ஏற்றி பழனி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வரும் வழியிலேயே தனசேகர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் பழனிக்கு வந்து தனசேகர் உடலை பெற்றுச் சென்றனர்.
    Next Story
    ×