search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆம்பூர் அருகே டிராக்டர் மீது லாரி மோதி டிரைவர் பலி
    X

    ஆம்பூர் அருகே டிராக்டர் மீது லாரி மோதி டிரைவர் பலி

    ஆம்பூர் அருகே டிராக்டர் மீது லாரி மோதிய விபத்தில் டிரைவர் பலியானதையடுத்து லாரி டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆம்பூர்:

    குடியாத்தம் பரவக்கல் பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 57). டிரைவர். இவர் ஆம்பூர் சர்க்கரை ஆலையில் கரும்பு லோடு இறக்கிவிட்டு, டிராக்டரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். வெங்கிலி என்ற இடத்தில் சென்றபோது எதிரே ஆம்பூரில் இருந்து வேலூர் நோக்கி வந்த டீசல் லாரி டிராக்டர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த முருகேசன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.

    இதுகுறித்து தகவலறிந்த ஆம்பூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் லாரி டிரைவர் செல்வமணியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×