என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கலசபாக்கம் அருகே விவசாயி அடித்து கொலை- மருமகன் உட்பட 3 பேர் கைது
Byமாலை மலர்14 Jan 2019 10:34 AM GMT (Updated: 14 Jan 2019 10:34 AM GMT)
கலசபாக்கம் அருகே பணத்தகராறு காரணமாக விவசாயி அடித்து கொலை செய்யப்பட்டது தொடர்பாக மருமகன் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை:
கலசபாக்கம் அருகே உள்ள கொல்லக்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 47). விவசாயி. இவரது மகள் கவிதா (23). இவருக்கும் கீழ்பாலூரை சேர்ந்த ராமசாமி மகன் பிரகாஷ் (28). என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 6 மாத பெண் குழந்தை உள்ளது.
பிரகாஷ் தனது மனைவி கவிதாவுடன் காஞ்சிபுரத்தில் தங்கி கூலி வேலை பார்த்து வந்தார். பொங்கல் பண்டிகை கொண்டாடுவதற்காக நேற்று சொந்த ஊருக்கு வந்தனர்.
கவிதா தனது அம்மாவை பார்த்துவிட்டு வருவதாக கூறி தாய் வீட்டிற்கு சென்றார். சென்றவர் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு திரும்பாததால் பிரகாஷ் அவரை தேடிச் சென்றார்.
அப்போது பிரகாஷ் தனக்கு பணத்தேவை இருப்பதாக சிவக்குமாரிடம் பணம் கொடுக்குமாறு கேட்டுள்ளார். என்னிடம் பணம் இல்லை என்று சிவக்குமார் கூறியுள்ளார். இதனால் 2 பேருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் கைகலப்பாக மாறியது.
இதனால் ஆத்திரமடைந்த பிரகாஷ் கட்டையால் சிவக்குமாரை பயங்கராமாக தாக்கினார். இதில் பலத்த காயமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்தார்.
அக்கம் பக்கத்தினர் சிவக்குமாரை மீட்டு கடலாடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக போளூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிவக்குமார் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இது குறித்து தகவலறிந்த கடலாடி போலீசார் வழக்கு பதிவு செய்து பிரகாஷ் அவரது அப்பா ராமசாமி அம்மா லட்சுமி உள்பட 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கலசபாக்கம் அருகே உள்ள கொல்லக்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 47). விவசாயி. இவரது மகள் கவிதா (23). இவருக்கும் கீழ்பாலூரை சேர்ந்த ராமசாமி மகன் பிரகாஷ் (28). என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 6 மாத பெண் குழந்தை உள்ளது.
பிரகாஷ் தனது மனைவி கவிதாவுடன் காஞ்சிபுரத்தில் தங்கி கூலி வேலை பார்த்து வந்தார். பொங்கல் பண்டிகை கொண்டாடுவதற்காக நேற்று சொந்த ஊருக்கு வந்தனர்.
கவிதா தனது அம்மாவை பார்த்துவிட்டு வருவதாக கூறி தாய் வீட்டிற்கு சென்றார். சென்றவர் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு திரும்பாததால் பிரகாஷ் அவரை தேடிச் சென்றார்.
அப்போது பிரகாஷ் தனக்கு பணத்தேவை இருப்பதாக சிவக்குமாரிடம் பணம் கொடுக்குமாறு கேட்டுள்ளார். என்னிடம் பணம் இல்லை என்று சிவக்குமார் கூறியுள்ளார். இதனால் 2 பேருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் கைகலப்பாக மாறியது.
இதனால் ஆத்திரமடைந்த பிரகாஷ் கட்டையால் சிவக்குமாரை பயங்கராமாக தாக்கினார். இதில் பலத்த காயமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்தார்.
அக்கம் பக்கத்தினர் சிவக்குமாரை மீட்டு கடலாடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக போளூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிவக்குமார் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இது குறித்து தகவலறிந்த கடலாடி போலீசார் வழக்கு பதிவு செய்து பிரகாஷ் அவரது அப்பா ராமசாமி அம்மா லட்சுமி உள்பட 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X