search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மார்த்தாண்டம் அருகே வேலை கிடைக்காததால் வாலிபர் தற்கொலை
    X

    மார்த்தாண்டம் அருகே வேலை கிடைக்காததால் வாலிபர் தற்கொலை

    மார்த்தாண்டம் அருகே படிப்புக்கு ஏற்றார்போல் அரசு வேலை கிடைக்காததால் மனமுடைந்த வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    நாகர்கோவில்:

    மார்த்தாண்டம் பாகோடு பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் (வயது 50). இவரது மகன் அருனேஸ் (22). இவர் ஐ.ஆர்.டி. படித்து முடித்துள்ளார்.

    தற்போது அங்குள்ள ஒரு லாரியில் டிரைவராக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் படிப்புக்கு ஏற்றார்போல் அரசு வேலை தேடிவந்தார். அவருக்கு அரசு வேலை கிடைக்கவில்லை. இதனால் மன வருத்தத்துடன் அருனேஸ் காணப்பட்டு வந்தார்.

    சம்பவத்தன்று இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வி‌ஷம் குடித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மயங்கிக்கிடந்தார். இதை பார்த்த அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு நெய்யாற்றின் கரை பகுதியில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக அருனேஸ் இறந்தார்.

    இது குறித்து மார்த்தாண்டம் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் சொர்ணலதா, சப்-இன்ஸ் பெக்டர் ஜாண்விக்டர் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×