search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தைப்பூச விழா நாளை தொடக்கம் - பழனி கோவிலில் 21ந் தேதி தேரோட்டம்
    X

    தைப்பூச விழா நாளை தொடக்கம் - பழனி கோவிலில் 21ந் தேதி தேரோட்டம்

    முருகனின் 3ம் படைவீடான பழனி திருத்தலத்தில் ஆண்டுதோறும் தைப்பூசத்திருவிழா மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. தைப்பூசத்திருவிழா நாளை காலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    பழனி:

    பழனியில் கோவிலில் 10 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் தினசரி காலை முத்துக்குமார சுவாமி வள்ளி தெய்வானையுடன் தந்தப்பல்லக்கில் சுவாமி புறப்பாடும், மாலை 8.30 மணிக்கு மேல் புதுச்சேரி சப்பரம், வெள்ளி ஆட்டுக்கிடா, வெள்ளி காமதேணு, வெள்ளி யானை, பெரிய தங்கமயில் வாகனம், மற்றும் தங்கக்குதிரை வாகனத்திலும் சுவாமி புறப்பாடு நடைபெறுகிறது.

    விழாவில் வருகிற 20-ந் தேதி இரவு 7.45 மணிக்கு மேல் 8.45 மணிக்குள் முத்துக்குமார சுவாமி வள்ளி தெய்வானை திருக்கல்யாணமும், இரவு 9.30 மணிக்குமேல் வெள்ளி ரதத்தில் மணக்கோலத்தில் சுவாமி நான்கு ரதவீதிகளில் உலாவும் நடைபெறுகிறது.

    வருகிற 21-ந் தேதி தைப்பூசம். அன்று காலை 5 மணிக்கு மேல் 6.30 மணிக்குள் சண்முக நதியில் தீர்த்தம் வழங்குதல். பகல் 12.40 மணிக்கு மேல் 1.30 மணிக்குள் முத்துக்குமாரசாமி வள்ளி தெய்வானையுடன் திருத்தேரில் எழுந்தருளளும், மாலை 4.30 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    வருகிற 24-ந் தேதி தெப்பத்தேர் நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை பழனி கோவில் இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் செந்தில்குமார் மற்றும் கோவில் அலுவலர்கள் செய்து வருகிறார்கள்.

    தைப்பூச திருவிழாவையொட்டி இம்மாதம் 19 -ந்தேதி முதல் 23- ந்தேதி வரை 5 நாட்களுக்கு தங்கரதத்தில் சாமி புறப்பாடு நடைபெறாது என்றும், தைப்பூச திருவிழா 5 ம் திருநாளான 19 ந்தேதி திருக்கோவில் சார்பில் தங்கரதபுறப்பாடு நடைபெறும் என்றும், கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×