என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குன்னம் அருகே ஆசிரியையிடம் கத்தியை காட்டி மிரட்டி 9 பவுன் நகைகள் பறிப்பு
Byமாலை மலர்12 Jan 2019 5:52 PM GMT (Updated: 12 Jan 2019 5:52 PM GMT)
குன்னம் அருகே ஆசிரியையிடம் கத்தியை காட்டி மிரட்டி 9 பவுன் நகைகளை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
குன்னம்:
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள மேலமாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மனைவி செந்தமிழ்ச்செல்வி(வயது 40). இவர் குன்னம் அருகே உள்ள ஒதியம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். முத்துசாமி வீட்டுடன் இணைந்த கடை வைத்து நடத்தி வருகிறார். செந்தமிழ்ச்செல்வி மேலமாத்தூரில் இருந்து 7 கிலோ மீட்டர் தூரம் உள்ள பள்ளிக்கு தினமும் தனது மொபட்டில் வந்து செல்வது வழக்கம். இவர் நகை அணிந்து தனியாக மொபட்டில் வந்து செல்வதை மர்ம நபர்கள் நோட்டமிட்டு உள்ளனர். இந்தநிலையில் நேற்று காலை செந்தமிழ்ச்செல்வி தனியாக தனது மொபட்டில் பள்ளிக்கு சென்றார். அப்போது ஒதியம் சமத்துவபுரத்தில் இருந்து 2 மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்த 2 பேரும், பனிக் குல்லா அணிந்த 2 பேரும் பின்தொடர்ந்து வந்துள்ளனர்.
சமத்துவபுரம் தாண்டி ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் செந்தமிழ்செல்வியை ஓரம்கட்டி மொபட்டில் இருந்து கீழே ஓடையில் தள்ளி, கத்தியை காட்டி மிரட்டி தாலி சங்கிலி, 2 தங்க சங்கிலிகள் என மொத்தம் 9 பவுன் நகைகளை பறித்து சென்றனர்.
மேலும் காதில் அணிந் திருந்த தோட்டை அறுத்து எடுக்க முற்பட்டபோது வேன் ஒன்று அந்த வழியாக வந்ததால் அப்படியே ஆசிரியை விட்டு விட்டு 9 பவுன் நகைகளுடன் மோட்டார் சைக்கிள்களில் தப்பி சென்றனர். இதுகுறித்து தகவலறிந்த குன்னம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கதிரவன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார். மேலும் மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள மேலமாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மனைவி செந்தமிழ்ச்செல்வி(வயது 40). இவர் குன்னம் அருகே உள்ள ஒதியம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். முத்துசாமி வீட்டுடன் இணைந்த கடை வைத்து நடத்தி வருகிறார். செந்தமிழ்ச்செல்வி மேலமாத்தூரில் இருந்து 7 கிலோ மீட்டர் தூரம் உள்ள பள்ளிக்கு தினமும் தனது மொபட்டில் வந்து செல்வது வழக்கம். இவர் நகை அணிந்து தனியாக மொபட்டில் வந்து செல்வதை மர்ம நபர்கள் நோட்டமிட்டு உள்ளனர். இந்தநிலையில் நேற்று காலை செந்தமிழ்ச்செல்வி தனியாக தனது மொபட்டில் பள்ளிக்கு சென்றார். அப்போது ஒதியம் சமத்துவபுரத்தில் இருந்து 2 மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்த 2 பேரும், பனிக் குல்லா அணிந்த 2 பேரும் பின்தொடர்ந்து வந்துள்ளனர்.
சமத்துவபுரம் தாண்டி ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் செந்தமிழ்செல்வியை ஓரம்கட்டி மொபட்டில் இருந்து கீழே ஓடையில் தள்ளி, கத்தியை காட்டி மிரட்டி தாலி சங்கிலி, 2 தங்க சங்கிலிகள் என மொத்தம் 9 பவுன் நகைகளை பறித்து சென்றனர்.
மேலும் காதில் அணிந் திருந்த தோட்டை அறுத்து எடுக்க முற்பட்டபோது வேன் ஒன்று அந்த வழியாக வந்ததால் அப்படியே ஆசிரியை விட்டு விட்டு 9 பவுன் நகைகளுடன் மோட்டார் சைக்கிள்களில் தப்பி சென்றனர். இதுகுறித்து தகவலறிந்த குன்னம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கதிரவன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார். மேலும் மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X