என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
சுங்குவார்சத்திரம் அருகே டேங்கர் லாரியில் ஆயிலை திருடி விற்ற 2 பேர் கைது
ஸ்ரீபெரும்புதூர்:
சுங்குவார்சத்திரம் அடுத்த பர்பாங்குழி பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான மாந்தோப்பில் சட்ட விரோதமாக ஆயில் பதுக்கி விற்பனை செய்யப்படுவதாக சுங்குவார்சத்திரம் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
போலீசார் மாந்தோப்பில் சோதனை செய்தனர். அப்போது அங்கு ஒரு டேங்கர் லாரியில் இருந்து கட்டுமான பணிக்கு உபயோகப்படுத்தும் ஆயிலை பேரல்களில் இறக்கி பதுக்கி வைத்து சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுவது தெரிய வந்தது.
விசாரணையில் சென்னையில் இருந்து கர்நாடகா மாநிலத்துக்கு டேங்கர் லாரி மூலம் 16 ஆயிரம் லிட்டர் ஆயில் எடுத்து செல்லப்படுவதும், மாந்தோப்பில் உள்ள பேரல்களில் நிரப்பி சட்ட விரோதமாக விற்பனை செய்யப்படுவதையும் கண்டுபிடித்தனர்.
இது குறித்து சுங்குவார்சத்திரம் போலீசார் வழக்குபதிவு செய்து சட்டவிரோதமாக ஆயிலை திருடி விற்பனை செய்த தூத்துக்குடி மாவட்டம், சாத்தான் குளம் மேட்டுதெரு பகுதியை சேர்ந்த ரஞ்சித், லாரி டிரைவர் வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கம் ஜி.சி.கே.நகரை சேர்ந்த ஞானமகிமைதாஸ் ஆகிய 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். டேங்கர் லாரி பறிமுதல் செய்யப்பட்டது.
மாந்தோப்பு உரிமையாளர் டில்லி கணேஷ், திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த பரமசிவன், ராஜா, சிவா ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்