search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காஞ்சீபுரம் அருகே காரில் எரிசாராயம் கடத்திய வாலிபர் கைது
    X

    காஞ்சீபுரம் அருகே காரில் எரிசாராயம் கடத்திய வாலிபர் கைது

    காஞ்சீபுரம் அருகே போலீசார் நடத்திய வாகன சோதனையில் காரில் எரிசாராயம் கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம்- ஓரிக்கை கூட்டுரோடு பகுதியில் போலீசார் நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது வேலூரில் இருந்து காஞ்சீபுரம் வழியாக வந்த ஒரு காரை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். அதில் இருந்த பிளாஸ்டிக் கேன்களில் எரிசாராயம் கொண்டு சென்றது தெரிய வந்தது.

    காரை ஓட்டி வந்த மணிகண்டன் (27) உத்திரமேரூக்கு செல்வதாக கூறினார்.

    காஞ்சீபுரம் தாலுகா இன்ஸ்பெக்டர் ராஜாங்கம், எரிசாராயம் கடத்திய வாலிபர் மணிகண்டனை கைது செய்தார். பிளாஸ்டிக் கேன்களில் இருந்த 875 லிட்டர் எரிசாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.

    எரிசாராயத்தை எங்கு வாங்கினார். யாரிடம் கொண்டு செல்கிறார். எரிசாராய கடத்தல் கும்பலுடன் மணிகண்டனுக்கு தொடர்பு உண்டா என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
    Next Story
    ×