search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு
    X

    முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு

    பேருந்துகள் மீது கல் வீசிய வழக்கில் முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு தடை விதிக்க சென்னை சிறப்பு நீதிமன்றம் இன்று மறுப்பு தெரிவித்தது. #ChennaiSpecialCourt #BalakrishnaReddy
    சென்னை:

    கடந்த 1998-ல் கள்ள சாராய விற்பனையை எதிர்த்து கர்நாடக எல்லையில் போராட்டம் நடைபெற்றது அப்போது, பேருந்துகள் மீது கல் வீசியதாக தமிழக அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிமீது வழக்கு தொடரப்பட்டது. இதில் தமிழக அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி உள்பட 108 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் வழக்கை விசாரிக்கும் சென்னை சிறப்பு நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்து வந்தது.

    இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 108 பேரில் 16 பேர் குற்றவாளிகள் என சிறப்பு நீதிமன்றம் அறிவித்தது. மேலும் முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டிக்கு 3 ஆண்டு சிறையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

    சிறை தண்டனை விதிப்பதாக நீதிபதி அறிவித்ததும், அவரது தரப்பில் ஆஜரான வக்கீல் டி.செல்வம் தீர்ப்பை எதிர்த்து ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்ய இருப்பதால் தண்டனையை நிறுத்தி வைக்கவேண்டும் என்று மனுதாக்கல் செய்தார்.
    இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, தண்டனையை நிறுத்தி வைப்பதாக அறிவித்தார்.

    மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி சிறை தண்டனை பெற்றால் எம்.பி., எம்.எல்.ஏ. என மக்கள் பிரதிநிதி பதவிகள் தானாகவே பறிபோய்விடும். எனவே, நீதிமன்றத் தீர்ப்பை அடுத்து அமைச்சர் பதவியிலிருந்து பாலகிருஷ்ண ரெட்டி அன்றைய தினமே ராஜினாமா செய்தார்.

    இந்நிலையில், பாலகிருஷ்ண ரெட்டியின் மேல் முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு வந்தது. அந்த மனுவை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், பாலகிருஷ்ண ரெட்டிக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்துள்ளது.

    மேலும், பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்த வழக்கில் பாலகிருஷ்ண ரெட்டி குற்றவாளி என்று அறிவித்த தீர்ப்புக்கும் தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. #BalakrishnaReddy #ChennaiSpecialCourt
    Next Story
    ×