என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பெரியநாயக்கன்பாளையத்தில் காதல் திருமணம் செய்த வாலிபர் தற்கொலை
Byமாலை மலர்11 Jan 2019 10:13 AM GMT (Updated: 11 Jan 2019 10:13 AM GMT)
பெரியநாயக்கன்பாளையத்தில் காதல் திருமணம் செய்த வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கவுண்டம்பாளையம்:
கோவை பெரியநாயக்கன்பாளையம் கென்னடி நகரை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் சிவசங்கர் (வயது 30). பெயிண்டர். இவர் பூர்ணிமா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்தார். 11 வயதில் ஒரு மகன் உள்ளார். கடந்த சில நாட்களாகவே சரியாக வேலை கிடைக்காமல் வீட்டில் இருந்தார். இதனால் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் மனம் உடைந்த சிவசங்கர் சம்பவத்தன்று விஷம் குடித்தார்.
சிறிது நேரத்தில் வயிற்று வலி தாங்க முடியாமல் சிவங்கர் அலறி சத்தம் போட்டார். அதிர்ச்சியடைந்த உறவினர்கள் சிவசங்கரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று சிவசங்கர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X