search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வளசரவாக்கம் மசாஜ் சென்டரில் விபசாரம் - பெண் கைது
    X

    வளசரவாக்கம் மசாஜ் சென்டரில் விபசாரம் - பெண் கைது

    வளசரவாக்கம் மசாஜ் சென்டரில் விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட 5 பெண்களை மீட்ட போலீசார் மசாஜ் சென்டர் மேலாளரை கைது செய்தனர்.
    போரூர்:

    வளசரவாக்கம், விருகம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மசாஜ் சென்டர் மற்றும் அழகு நிலையங்கள் என்கிற பெயரில் வெளி மாநில பெண்களை வைத்து சிலர் விபச்சாரம் நடத்தி வருவதாக தி.நகர் துணை கமி‌ஷனர் அரவிந்தனுக்கு புகார்கள் வந்தன.

    அவற்றை போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் வளசரவாக்கம் ஸ்ரீதேவி குப்பம் மெயின் ரோட்டில் முதல் தளத்தில் இயங்கி வந்த மசாஜ் சென்டரில் விபசாரம் நடப்பதாக தகவல் கிடைத்தது.

    இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் தலைமையில் சென்ற தனிப்படை போலீசார் மசாஜ் சென்டரில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு ஒரு அறையில் பெண்களை வைத்து விபசாரம் நடத்தி வந்தது தெரியவந்தது.

    உடனடியாக மசாஜ் சென்டர் மேலாளர் ஜெயந்தி(42) என்பவரை கைது செய்தனர். இவர் வேளச்சேரி கன்னிகாபுரத்தை சேர்ந்தவர்.

    விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட சென்னை, மும்பை, கொல்கத்தாவைச் சேர்ந்த அழகிகள் 5 பேரையும் மீட்டு மயிலாப்பூர் அரசு பெண்கள் காப்பகத்தில் சேர்த்தனர். தலைமறைவான மசாஜ் சென்டர் உரிமையாளர் தமிழ் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    செல்போன் மூலம் குறுந்தகவல் அனுப்பி வாடிக்கையாளர்களை அழைத்து மசாஜ் என்கிற பெயரில் நூதன முறையில் விபசாரம் நடத்தி வந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    Next Story
    ×