search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குரூப்-2 தேர்வுக்கான உத்தேச விடைகள் வெளியீடு
    X

    குரூப்-2 தேர்வுக்கான உத்தேச விடைகள் வெளியீடு

    குரூப்-2 தேர்வுக்கான உத்தேச விடைகளை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. #GroupII #TNPSC
    சென்னை:

    தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) கடந்த 5-ந் தேதி குரூப்-2-ல் அடங்கிய உதவி பொது வக்கீல் மற்றும் உதவி தொழில்நுட்பவியலாளர் பதவிக்கான எழுத்து தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வுக்கான உத்தேச விடைகள் தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டு இருக்கிறது.

    உத்தேச விடைகளில் மறுப்பு ஏதேனும் இருப்பின் தேர்வு எழுதிய விண்ணப்பதாரர்கள் மட்டும் அதனை தேர்வாணையத்துக்கு தெரிவித்து சரியான விடைகளை கோர முடியும். அதற்கான கோரிக்கைகள் விண்ணப்பதாரர்களிடம் இருந்து 16-ந் தேதி மாலை 5.45 மணி வரை இணையதள பக்கத்தில் பதிவு செய்யலாம். அதன்பின்னர் பெறப்படும் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படமாட்டாது.

    மேற்கண்ட தகவல் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் இரா.சுதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×