search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோடம்பாக்கத்தில் மின்சார ரெயில் மோதி டிரைவர் பலி
    X

    கோடம்பாக்கத்தில் மின்சார ரெயில் மோதி டிரைவர் பலி

    கோடம்பாக்கத்தில் மின்சார ரெயில் மோதி டிரைவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
    சென்னை:

    சென்னை கோடம்பாக்கம் திருவள்ளூர் தெருவை சேர்ந்தவர் பிரபாகரன்(வயது 51). இவர் அந்த பகுதியில் உள்ள நிறுவனத்தில் கார் டிரைவராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் நேற்று காலை பிரபாகரன் கோடம்பாக்கம் ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்றார்.

    அப்போது தாம்பரத்தில் இருந்து கடற்கரை மார்க்கமாக வந்த மின்சார ரெயில் அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட பிரபாகரன் தலையில் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து ரெயில் ஓட்டுனர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

    விரைந்து வந்த மாம்பலம் ரெயில்வே போலீசார், பிரபாகரனின் உடலை மீட்டு ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இது குறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×