search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இரிடியம் தருவதாக மோசடி - விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் உள்பட 2 பேர் கைது
    X

    இரிடியம் தருவதாக மோசடி - விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் உள்பட 2 பேர் கைது

    இரிடியம் கலசம் தருவதாக ரூ.1.20 கோடி மோசடி செய்த விடுதலை சிறுத்தை கட்சி பிரமுகர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    திண்டுக்கல்:

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 45). கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் மனோஜ் (28) இவர்களுக்கு திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தைச் சேர்ந்த வீரய்யா, ஆனந்தபாபு ஆகியோருடன் பழக்கம் ஏற்பட்டது.

    இரிடியம் கலசம் வாங்கி கொடுப்பதாக வீரய்யா, ஆனந்தபாபு ஆகியோர் முத்துக்குமார் மற்றும் மனோஜிடம் ரூ.1.20 கோடி வாங்கியுள்ளனர். ஆனால் அவர்கள் இரிடியம் கலசத்தை கொடுக்காமல் இழுத்தடித்து உள்ளனர்.

    இதனால் அதிருப்தியடைந்த முத்துக்குமார் மற்றும் மனோஜ் பணத்தை திருப்பி தருமாறு கேட்டுள்ளனர்.

    ஆனால் பணம் தராமல் மறுத்துள்ளனர். இது குறித்து நத்தம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து வீரய்யா மற்றும் அவரது கார் ஓட்டுனர் ஆனந்தபாபு ஆகியோரை கைது செய்தனர்.

    மேலும் சிலருக்கு தொடர்பு உள்ளதும் தெரிய வந்தது. இவர்கள் வேறு யாரிடமும் இது போன்று மோசடி செய்துள்ளனரா? என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கைது செய்யப்பட்ட வீரய்யா, விடுதலை சிறுத்தை கட்சி மாநில பொறுப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது. #tamilnews
    Next Story
    ×