search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிகிச்சை பெற்றபோது என்னுடன் அமைச்சர் சிவி சண்முகம் ஜெயலலிதாவை பார்த்தார் - புகழேந்தி
    X

    சிகிச்சை பெற்றபோது என்னுடன் அமைச்சர் சிவி சண்முகம் ஜெயலலிதாவை பார்த்தார் - புகழேந்தி

    அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது ஜெயலலிதாவை என்னுடன் சேர்ந்து சிவி சண்முகம பார்த்தார் என புகழேந்தி பேட்டி அளித்துள்ளார். #Pugalenthi #CVShanmugam #JayalalithaaDeath
    பெண்ணாடம்:

    கடலூர் மாவட்டம் பெண்ணாடத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு நேற்று மாலை அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் கர்நாடக மாநில செயலாளரும், செய்தி தொடர்பாளருமான புகழேந்தி வந்தார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கேள்வி:- ஜெயலலிதா சாவில் மர்மம் இருப்பதாக அமைச்சர் சி.வி.சண்முகம் குற்றம் சாட்டியுள்ளாரே அது குறித்து உங்கள் கருத்து என்ன?

    பதில்:- ஜெயலலிதா அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த போது நான் சென்று பார்த்தேன். அப்போது அமைச்சர் சி.வி.சண்முகமும் வந்து பார்த்தார். அப்போது எந்த கருத்தையும் அவர் கூறவில்லை.

    ஆனால், தற்போது அமைச்சர் சி.வி.சண்முகம் பல்வேறு கருத்துக்களை கூறுகிறார். ஜெயலலிதா சாவில் மர்மம் இருக்கிறது என்று தெரிவிக்கிறார். மேலும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை கேவலமாக பேசுகிறார். இவர் சசிகலாவின் காலில் விழுந்து அமைச்சரானவர்.



    கே:- என்.எல்.சி. 3-வது சுரங்க விரிவாக்கம் பற்றி உங்களது கருத்து என்ன?

    ப:- நெய்வேலியில் 3-வது சுரங்கம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தலைமையில் சேத்தியாத்தோப்பில் போராட்டம் நடைபெற்றது.

    தமிழ்நாட்டில் உள்ள அமைச்சர்களில் சில பேருக்கு என்.எல்.சி. என்றால் அதற்கான அர்த்தம் தெரியாது. என்.எல்.சி. 3-வது சுரங்க விரிவாக்கத்துக்கு ஆதரவு தெரிவிப்பதுபோல் அமைச்சர் எம்.சி.சம்பத் கூறியுள்ளார்.

    ஆனால், கடலூர் பாராளுமன்ற உறுப்பினர் அருண்மொழிதேவன் பேசும்போது, என்.எல்.சி. 3-வது சுரங்க விரிவாக்கத்தை அனுமதிக்க மாட்டோம் என்று கூறுகிறார். இவர்களுக்குள்ளேயே ஒற்றுமை இல்லை என்று தெரிய வருகிறது.

    கே:- திருவாரூர் தேர்தல் ரத்து செய்யப்பட்டது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

    ப:- திருவாரூர் இடைத்தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் காமராஜ் வேட்பாளராக நிறுத்தப்பட்டார்.

    எங்கள் மீதுள்ள பயத்தால் அனைவரும் இந்த இடைத்தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என தேர்தல் அதிகாரியிடம் மனுக்கள் கொடுத்தனர். மேலும் நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்து தேர்தலை ரத்து செய்து விட்டனர்.

    பொங்கல் இனாம் அனைவருக்கும் வழங்கப்படும் என்று அறிவித்தனர்.தற்போது அவர்களாகவே வழக்கு தொடர்ந்து வறுமை கோர்ட்டுக்கு கீழே உள்ளவர்களுக்கு மட்டுமே பொங்கல் இனாம் வழக்கப்படும் என தெரிவிப்பது ஒரு ஏமாற்று வேலையாகும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Pugalenthi #CVShanmugam #JayalalithaaDeath
    Next Story
    ×