search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பொங்கல் பரிசு ஆயிரம் ரூபாய்க்கு தடை- அதிமுகவின் முறையீட்டு மனுவை ஏற்க ஐகோர்ட்டு மறுப்பு
    X

    பொங்கல் பரிசு ஆயிரம் ரூபாய்க்கு தடை- அதிமுகவின் முறையீட்டு மனுவை ஏற்க ஐகோர்ட்டு மறுப்பு

    வசதியானவர்களுக்கும் பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் தரக்கூடாது என பிறப்பித்த உத்தரவை எதிர்த்து அதிமுக சார்பில் இன்று தாக்கல் செய்யப்பட்ட முறையீட்டு மனுவை சென்னை ஐகோர்ட் நிராகரித்தது. #Pongalgift #MadrasHC
    சென்னை:

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முந்திரி, உலர்ந்த திராட்சை, ஏலக்காய், 2 அடி நீளமுள்ள கரும்பு ஆகியவற்றுடன் ரூ.1,000 கூடிய பொங்கல் பரிசு தொகுப்பை ஒவ்வொரு ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ரொக்கப்பணத்துடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பு நேற்று முன்தினம் முதல் பொதுமக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில், ரூ.1,000 ரொக்கமாக கொடுப்பதற்கு தடை விதிக்கக்கோரி கோவையை சேர்ந்த டேனியல் என்பவர்  சென்னை ஐகோர்ட்டில் பொதுநல மனுவை தாக்கல் செய்தார்.

    இந்த மனுவை நேற்று விசாரித்த சென்னை ஐகோர்ட்,  வறுமைக்கோட்டுக்கு மேல் உள்ளவர்களுக்கு ரூ.1000 பொங்கல் பரிசு வழங்க தடை விதித்து உத்தரவிட்டது.



    மேலும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 வழங்கப்படுவது ஏன்? என கேள்வியெழுப்பியதுடன் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களை தவிர மற்றவர்களுக்கு பொங்கல் பரிசு ரூ.1000 வழங்கக்கூடாது எனவும் உத்தரவிட்டது.

    இதனால் வெள்ளை ரேசன் அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் கிடைக்காது என தெரியவந்தது. ஏற்கனவே வெள்ளை அட்டை வைத்துள்ள பலர் பணம் பெற்றுள்ள நிலையில் கிடைக்காத சிலர் வேதனை பட்டு வந்தனர்.

    இந்நிலையில், ஐகோர்ட் விதித்த தடையை எதிர்த்து அ.தி.மு.க. சார்பில் வழக்கறிஞர் பாலசுப்பிரமணியம் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு ஒன்றை தாக்கல் செய்தார். இம்மனுவை விசாரணைக்கு ஏற்க ஐகோர்ட் மறுத்துவிட்டது. தேவைபட்டால் சுப்ரீம் கோர்ட்டை அணுகி அ.தி.மு.க. நிவாரணம் தேடலாம் என மனுதாரருக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர். #Pongalgift #MadrasHC
    Next Story
    ×