search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரெயில்வே சுரங்கப்பாதை பணியின் போது பண்டைய கால பொருட்கள் கண்டுபிடிப்பு
    X

    ரெயில்வே சுரங்கப்பாதை பணியின் போது பண்டைய கால பொருட்கள் கண்டுபிடிப்பு

    ரெயில்வே சுரங்கப்பாதை அமைக்கும் பணியின்போது பழங்காலத்து செங்கல் கட்டிடங்கள், மண்ணால் செய்யப்பட்ட பொருட்களும், பானை ஓடுகள், மணிகள் உள்ளிட்ட பொருட்களும் கண்டுப்பிடிக்கப்பட்டன.
    திருப்புவனம்:

    திருப்புவனம் அருகே உள்ள லாடனேந்தல் கிராமத்தின் வழியாக டி.ஆலங்குளம் கிராமத்திற்கு செல்லும் பாதை உள்ளது. இந்த பாதையின் குறுக்கே மதுரை-ராமேசுவரம் ரெயில் தண்டவாளம் உள்ளது. இந்த வழியாக விவசாய பொருட்கள் கொண்டு செல்ல ஏதுவாக சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ந்து, ரெயில்வே நிர்வாகம் சார்பில் ரூ.1¼கோடி மதிப்பில் சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    அப்போது வடக்கு பகுதியில் பழங்கால உறை கிணறும், தென்புறத்தில் சுரங்கப்பாதை அமைக்கும் பணியின்போது பழங்காலத்து செங்கல் கட்டிடங்கள் இருப்பதும், மேலும் மண்ணால் செய்யப்பட்ட பொருட்களும், பானை ஓடுகள், மணிகள் உள்ளிட்ட பொருட்களும் கண்டுப்பிடிக்கப்பட்டன. இதுகுறித்து கீழடியில் அகழ்வாராய்ச்சி பணியில் ஈடுபட்டுள்ள தொல்லியல் துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டதை தொடர்ந்து, அவர்கள் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அதில் உறை கிணறு 2ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்புள்ள பண்டைய காலத்து கிணறு என்று தெரிவித்தனர். இதையடுத்து கீழடி போன்று லாடனேந்தல் பகுதியிலும் தொடர்ந்து ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்று இந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
    Next Story
    ×