search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கரூரில் புதிதாக பஸ் நிலையம் அமைக்க வேண்டும் - தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்
    X

    கரூரில் புதிதாக பஸ் நிலையம் அமைக்க வேண்டும் - தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்

    கரூரில் புதிதாக ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என திமுக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    கரூர்:

    கரூர் மாவட்ட தி.மு.க.வின் அவசர செயற்குழு கூட்டம் கலைஞர் அறிவாலய கூட்டரங்கில் நடந்தது-. மாவட்ட அவை தலைவர் டி.ராஜேந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் நன்னியூர் ராஜேந்திரன், முன்னாள் அமைச்சர் வி. செந்தில்பாலாஜி, மாநில விவசாய அணி செயலாளர் ம.சின்னசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட  தீர்மானங்கள் வருமாறு:-

    வாங்கல் - மோகனூர் உயர்மட்ட பாலத்தில் மின்விளக்குகள் பொருத்தப்பட்டும் மின்இணைப்பு கொடுக்கப்படாததால் இருள் சூழ்ந்தபடி இருக்கிறது. எனவே அங்கு மின்விளக்குகள் எரிவதற்கு வழிவகை செய்ய வேண்டும். அமராவதி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட கோயம்பள்ளி உயர்மட்ட பாலப்பணியை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். வாங்கல் அல்லது தவுட்டுப்பாளையம் பகுதியில் காவிரியின் குறுக்கே தடுப்பணை கட்ட வேண்டும். கரூருக்கு புதிதாக ஒருங்கிணைந்த பஸ் நிலையத்தை அமைக்க வேண்டும். அதுவரை போக்குவரத்து நெரிசலை தவிர்க்க கரூர் பஸ் நிலையத்தில் நகரும் படிகட்டுகள் அமைக்க வேண்டும்.

    மக்களிடம் செல்வோம், சொல்வோம், மக்களின் மனதை வெல்வோம் என்ற கருத்தினை முன்வைத்து அ.தி.மு.க. அரசின் மக்கள் விரோத செயல்பாடுகளை சுட்டி காட்டி ஊராட்சி சபை கூட்டம் நடத்த வேண்டும். மேற்கண்டவை உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் மாநில நெசவாளர் அணி செயலாளர் பரணி கே. மணி, வக்கீல் மணிராஜ், மாவட்ட துணை செயலாளர்கள் ரமேஷ்பாபு, எம்.எஸ்.கருணாநிதி, ஒன்றிய செயலாளர்கள் எம். ரகுநாதன், ஆர்.கந்தசாமி, எம்.எஸ்.மணியன் மற்றும் திரளான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். #DMK
    Next Story
    ×