search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விருதுநகரில் பள்ளி வளாகத்தில் வி‌ஷம் குடித்த மாணவர் - ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை
    X

    விருதுநகரில் பள்ளி வளாகத்தில் வி‌ஷம் குடித்த மாணவர் - ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை

    விருதுநகரில் பள்ளி வளாகத்தில் வி‌ஷம் குடித்த பிளஸ்-2 மாணவருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    விருதுநகர்:

    விருதுநகர் அல்லம்பட்டியைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மகன் சஞ்சய் (வயது 16). தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார்.

    சம்பவத்தன்று அவர், வீட்டில் இருந்து வழக்கம் போல் பள்ளிக்குச் சென்றார். ஆனால் யாரிடமும் பேசாமல் இருந்துள்ளார்.

    இந்த நிலையில் பள்ளி வளாகத்தில் சஞ்சய், திடீரென வி‌ஷம் (எலிமருந்து) குடித்து மயங்கினார். உடனடியாக அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு மாணவர் சஞ்சய்க்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து விருதுநகர் கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். சகமாணவர்களுடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக சஞ்சய்க்கு தனி வகுப்பு நடத்தியதாகவும், இதனால் மன வேதனை அடைந்து வி‌ஷம் குடித்திருப்பதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. மேலும் தொடர்ந்து விசாரணை நடக்கிறது. #tamilnews
    Next Story
    ×