என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விருதுநகரில் பள்ளி வளாகத்தில் விஷம் குடித்த மாணவர் - ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை
Byமாலை மலர்9 Jan 2019 11:48 AM GMT (Updated: 9 Jan 2019 11:48 AM GMT)
விருதுநகரில் பள்ளி வளாகத்தில் விஷம் குடித்த பிளஸ்-2 மாணவருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விருதுநகர்:
விருதுநகர் அல்லம்பட்டியைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மகன் சஞ்சய் (வயது 16). தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார்.
சம்பவத்தன்று அவர், வீட்டில் இருந்து வழக்கம் போல் பள்ளிக்குச் சென்றார். ஆனால் யாரிடமும் பேசாமல் இருந்துள்ளார்.
இந்த நிலையில் பள்ளி வளாகத்தில் சஞ்சய், திடீரென விஷம் (எலிமருந்து) குடித்து மயங்கினார். உடனடியாக அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு மாணவர் சஞ்சய்க்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து விருதுநகர் கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். சகமாணவர்களுடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக சஞ்சய்க்கு தனி வகுப்பு நடத்தியதாகவும், இதனால் மன வேதனை அடைந்து விஷம் குடித்திருப்பதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. மேலும் தொடர்ந்து விசாரணை நடக்கிறது. #tamilnews
விருதுநகர் அல்லம்பட்டியைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மகன் சஞ்சய் (வயது 16). தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார்.
சம்பவத்தன்று அவர், வீட்டில் இருந்து வழக்கம் போல் பள்ளிக்குச் சென்றார். ஆனால் யாரிடமும் பேசாமல் இருந்துள்ளார்.
இந்த நிலையில் பள்ளி வளாகத்தில் சஞ்சய், திடீரென விஷம் (எலிமருந்து) குடித்து மயங்கினார். உடனடியாக அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு மாணவர் சஞ்சய்க்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து விருதுநகர் கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். சகமாணவர்களுடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக சஞ்சய்க்கு தனி வகுப்பு நடத்தியதாகவும், இதனால் மன வேதனை அடைந்து விஷம் குடித்திருப்பதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. மேலும் தொடர்ந்து விசாரணை நடக்கிறது. #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X