என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
திருத்துறைப்பூண்டி அருகே 2 டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்கள்- பணம் கொள்ளை
திருத்துறைப்பூண்டி:
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியை அடுத்த ராயநல்லூர் புழுதிக்குடி சாலையில் அருகருகே 2 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இதில் ஒரு கடையில் திருக்களாரை சேர்ந்த முருகானந்தம்(வயது 46) என்பவர் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வருகிறார். பள்ளிவர்த்தியை சேர்ந்த அருள்ஜோதி(40), மீனம்பநல்லூரை சேர்ந்த ராஜா ஆகிய 2 பேரும் விற்பனையாளர்களாகவும் உள்ளனர். இதே போல் மற்றொரு கடையில் ஆதிச்சபுரத்தை சேர்ந்த ஜீவா(47) மேற்பார்வையாளராகவும், ஓவரூரை சேர்ந்த கரிகாலன்(41), பாமணியை சேர்ந்த லெனின்(43) ஆகியோர் விற்பனையாளர்களாகவும் பணியாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் விற்பனையை முடித்துவிட்டு 2 டாஸ்மாக் கடைகளையும் பூட்டி வீட்டுக்கு சென்று விட்டனர். நேற்று பகலில் கடையை திறக்க ஊழியர்கள் வந்தபோது டாஸ்மாக் கடைகளின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் உள்ளே சென்று பார்த்தபோது 2 கடைகளிலும் ரூ. 1 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்களும், ரூ. 11 ஆயிரமும் திருட்டு போனது தெரிய வந்தது.
இது தொடர்பாக 2 டாஸ்மாக் கடைகளின் மேற்பார்வையாளர்கள் திருத்துறைப்பூண்டி போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மதுபாட்டில்கள், பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்