search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தொழிற்சங்கத்தினர் 2வது நாளாக போராட்டம் - குமரியில் 11 இடங்களில் மறியல் போராட்டம்
    X

    தொழிற்சங்கத்தினர் 2வது நாளாக போராட்டம் - குமரியில் 11 இடங்களில் மறியல் போராட்டம்

    நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையம் முன்பு நடந்த மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். #BharatBandh
    நாகர்கோவில்:

    நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையம் முன்பு நடந்த மறியல் போராட்டத்திற்கு சி.ஐ.டி.யூ. மாவட்டச் செயலாளர் தங்கமோகன், எல்.பி.எப். மாநில துணை செயலாளர் இளங்கோ, ஐ.என்.டி.யூ.சி. செயலாளர் முருகேசன், ஹெச்.எம்.எஸ் மாவட்ட செயலாளர் முத்துகருப்பன், ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட துணை தலைவர் ஸ்ரீகுமார் மற்றும் அந்தோணிமுத்து மற்றும் மகாராஜப்பிள்ளை, ஞானதாஸ் ஆகியோர் தலைமை தாங்கினர்.

    சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ., காங்கிரஸ் மாவட்ட தலைவர் வக்கீல் ராதாகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் செல்லசுவாமி, ஐ.என்.டி.யூ.சி. மாவட்ட தலைவர் அனந்த கிருஷ்ணன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.

    இதை தொடர்ந்து போராட்டக்காரர்கள் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கானோரை போலீசார் கைது செய்தனர்.

    நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த மறியல் போராட்டத்திற்கு சி.ஐ.டி.யூ. மாவட்ட துணை செயலாளர் சந்திரகலா தலைமை தாங்கினார். அங்கன்வாடி ஊழியர் சங்க தலைவி விஜயலெட்சுமி, பொதுச்செயலாளர் சரஸ்வதி, பொருளாளர் சரோஜினி, துணைச் செயலாளர் அமுதா, சி.ஐ.டி.யூ. மாவட்ட பொருளாளர் சித்ரா, துணைத்தலைவர்கள் சந்திரபோஸ், ஜாண் சவுந்தர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    போராட்டத்தில் ஈடுபட்ட அங்கன்வாடி ஊழியர்கள் உள்பட பல்வேறு தொழிற்சங்கங்களை சேர்ந்தவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.

    ராஜாக்கமங்கலத்தில் கட்டுமான சங்கம் மாவட்ட செயலாளர் பெருமாள் தலைமையிலும், கருங்கல்லில் ஆட்டோ சங்க மாவட்ட செயலாளர் சோபன்ராஜ் தலைமையில் மறியல் போராட்டம் நடந்தது. முன்னாள் எம்.பி. பெல்லார்மின் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

    நித்திரவிளையில் சி.ஐ.டி.யூ. மாவட்ட குழு உறுப்பினர் வல்சலம் தலைமையிலும், கொல்லங்கோட்டில் விஜயாமோகன் தலைமையிலும், குழித்துறையில் சி.ஐ.டி.யூ. மாவட்ட தலைவர் சிங்காரம் தலைமையிலும் மறியல் போராட்டம் நடந்தது. போராட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. லீமாரோஸ், எல்.பி.எப். மாவட்ட செயலாளர் ஞானதாஸ் கலந்து கொண்டு பேசினார்கள்.

    அருமனையில் சி.ஐ.டி.யூ. மாவட்ட குழு உறுப்பினர் கிறிஸ்டோபர் தலைமையிலும், குலசேகரத்தில் தோட்ட தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் வல்ச குமார் தலைமையிலும், வேர்கிளம்பியில் கட்டுமான சங்க துணை செயலாளர் சகாய ஆண்டனி தலைமையிலும், ஆரல்வாய்மொழியில் சக்திவேல் தலைமையிலும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். #BharatBandh

    Next Story
    ×