search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஸ்ரீபெரும்புதூர்-திருவள்ளூரில் கஞ்சா கடத்திய 2 வாலிபர்கள் கைது
    X

    ஸ்ரீபெரும்புதூர்-திருவள்ளூரில் கஞ்சா கடத்திய 2 வாலிபர்கள் கைது

    ஸ்ரீபெரும்புதூர்-திருவள்ளூரில் கஞ்சா கடத்திய 2 வாலிபர்கள் கைது

    ஸ்ரீபெரும்புதூர்:

    ஸ்ரீபெரும்புதூரில் போதை பொருள் கடத்துவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து ஸ்ரீபெரும்புதூர் போதை பொருள் தடுப்பு பிரிவு மற்றும் நுண்ணறிவு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு ஜீலி யஸ்சீசர், இன்ஸ்பெக்டர் சித்ரா ஆகியோர் ஸ்ரீபெரும்புதூர் பஸ்நிலையத்தில் கண்காணிப்பில் ஈடுபட்டனர், அப்போது பெரிய மூட்டையுடன் சந்தேகத்திற்கு இடமாக நின்ற வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அந்த மூட்டையில் 16 கிலோ கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    விசாரணையில் பிடிபட்ட வாலிபர் ஆந்திர மாநிலம் குடிமண்டலம், சேக்லாம்பட்டியை சேர்ந்த கந்துலாபாப்பாராவ் என்பது தெரியவந்தது.

    ஆந்திராவில் இருந்து கஞ்சாவை கேரளாவுக்கு கடத்தியதாக தெரிவித்தார். இதையடுத்து கந்துலா பாப்பாராவை போலீசார் கைது செய்து 16 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். அவரை ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு ரூ. 4 லட்சம் ஆகும்.

    திருவள்ளூர் தாலுகா போலீசார் பட்டரைப் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் இன்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது ஆந்திராவில் இருந்து மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த 2 வாலிபர்களை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது ஒரு வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

    பிடிபட்ட வாலிபர் வைத்திருந்த பையில் போதைப் பொருளான கஞ்சா இருப்பது தெரிய வந்தது. விசாரணையில் சென்னை தண்டையார்பேட்டையைச் சேர்ந்த யுவராஜ் என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

    Next Story
    ×