search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிளாஸ்டிக் பொருட்களை உள்ளாட்சி அமைப்புகளிடம் ஒப்படைக்க வேண்டும் - கலெக்டர் உத்தரவு
    X

    பிளாஸ்டிக் பொருட்களை உள்ளாட்சி அமைப்புகளிடம் ஒப்படைக்க வேண்டும் - கலெக்டர் உத்தரவு

    தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பொது இடங்களில் தூக்கி எறியாமல் உள்ளாட்சி அமைப்புகளிடம் ஒப்படைக்க வேண்டும் என கலெக்டர் உத்தரவிட்டார். #Plasticban
    வேலூர்:

    ஒருமுறை உபயோகப்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடை அமலுக்கு வந்தது.

    இதுதொடர்பாக இந்த வகை பிளாஸ்டிக் பொருட்கள், உற்பத்தியாளர்கள், சில்லரை வியாபாரிகள், வணிகர்கள், அனைத்து விற்பனையாளர்கள் மற்றும் பொதுமக்கள் தங்களிடம் உள்ள தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்து வைக்காமல், அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளிடம் ஒப்படைக்க வேண்டும்.

    தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பொது இடங்களில் தூக்கி எறியாமல் உள்ளாட்சி அமைப்புகள் அல்லது பதிவு செய்யப்பட்ட மறுசுழற்சி நிறுவனங்களிடம் ஒப்படைப்பதன் மூலம் பாதுகாப்பான முறையில் சுழற்சி செய்ய ஏதுவாக அமையும்.

    இதுகுறித்த விவரங்களை தெரிந்துகொள்ள மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைமை அலுவலகத்திற்கு 044-22353153, 8056042121 என்ற எண்ணிலும், மாவட்ட அலுவலகத்திற்கு 0416-2242700, 8056042130, 04174-234831, 8056042184 என்ற எண்ணிலும், WWW.Plasticpollutionfreetn.org என்ற இணையதள முகவரியிலும் தெரிந்து கொள்ளலாம்.

    தமிழக அரசால் பிளாஸ்டிக் மாசில்லா தமிழகத்தை உருவாக்கு வதற்காக எடுக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #Plasticban
    Next Story
    ×