search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    செங்கோட்டையனுக்கு விளையாட்டு துறை கூடுதல் பொறுப்பாக ஒதுக்கீடு - ஆளுநர் மாளிகை
    X

    செங்கோட்டையனுக்கு விளையாட்டு துறை கூடுதல் பொறுப்பாக ஒதுக்கீடு - ஆளுநர் மாளிகை

    பாலகிருஷ்ண ரெட்டி ராஜினாமாவை தொடர்ந்து, விளையாட்டு துறை பொறுப்பை அமைச்சர் செங்கோட்டையன் கூடுதலாக கவனிப்பார் என ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது. #BalakrishnaReddy #Sengottaiyan
    சென்னை:

    பேருந்து மீது கல் வீசிய வழக்கில் பாலகிருஷ்ண ரெட்டிக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.

    சிறை தண்டனை பெற்ற பாலகிருஷ்ண ரெட்டியை அமைச்சர் பதவியில் இருந்து உடனே டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தினார்.

    இதற்கிடையே, பேருந்து மீது கல் வீசிய வழக்கில் சிறை தண்டனை பெற்ற பாலகிருஷ்ண ரெட்டி, தனது பதவியை ராஜினாமா செய்தார்.



    இந்நிலையில், பாலகிருஷ்ண ரெட்டி ராஜினாமாவை தொடர்ந்து, விளையாட்டு துறை பொறுப்பை அமைச்சர் செங்கோட்டையன் கூடுதலாக கவனிப்பார் என ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக, ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், பாலகிருஷ்ண ரெட்டியின் ராஜினாமா ஏற்கப்பட்டுள்ளது. அவர் வகித்து வந்த விளையாட்டு துறை பொறுப்பை கூடுதலாக அமைச்சர் செங்கோட்டையன் கவனிப்பார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பரிந்துரையை ஏற்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இந்நடவடிக்கையை எடுத்துள்ளார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    தற்போது, செங்கோட்டையன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. #BalakrishnaReddy #Sengottaiyan
    Next Story
    ×