என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
புதுக்கோட்டை - லாரி வேன் மோதிய விபத்தில் 10 பேர் பலி
Byமாலை மலர்6 Jan 2019 10:45 AM GMT (Updated: 6 Jan 2019 10:53 AM GMT)
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே வேனும் கன்டெய்னர் லாரியும் மோதிய விபத்தில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். #PudukkottaiAccident
புதுக்கோட்டை:
ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் கோயில் வழிபாட்டுக்கு பிறகு சொந்த ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் பிரிவு சாலையில் இன்று மதியம் வேன் வந்து கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த கன்டெய்னர் லாரி கடுப்பாட்டை இழந்து வேன் மீது வேகமாக மோதியது.
இந்த விபத்தில் வேனில் சென்ற ஐயப்ப பக்தர்கள் 7 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் படுகாயம் அடைந்த 6 பேரை அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மேலும் 3 பேர் இறந்தனர்.
தகவலறிந்து போலீசார் அங்கு விரைந்து சென்றனர். விபத்தால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலை சீர்செய்தனர். விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு திருமயம் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
காயமடைந்து திருமயம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து அமைச்சர் விஜயபாஸ்கர் ஆறுதல் தெரிவித்தார். #PudukkottaiAccident
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X