என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தமிழகம் முழுவதும் 2 நாட்கள் 6 ஆயிரம் மதுக்கடைகள் மூடப்படும் -டாஸ்மாக் தொ.மு.ச. தலைவர் பேட்டி
Byமாலை மலர்4 Jan 2019 7:16 PM GMT (Updated: 4 Jan 2019 7:16 PM GMT)
15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் 6 ஆயிரம் மதுக்கடைகள் 2 நாட்கள் மூடப்படும் என்று டாஸ்மாக் தொ.மு.ச. தலைவர் கூறினார். #TasmacShop #Tamilnadu
விழுப்புரம்:
தமிழ்நாடு டாஸ்மாக் தொ.மு.ச. தலைவர் ராஜவேல் நேற்று விழுப்புரத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் கடந்த 2003-ம் ஆண்டு பணியில் சேர்ந்த டாஸ்மாக் ஊழியர்களை இதுநாள் வரையிலும் பணிநிரந்தரம் செய்யவில்லை. 480 நாட்கள் வேலைக்குச்சென்றாலே பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று விதிமுறை உள்ளது. இதுகுறித்து பலமுறை தமிழக அரசிடம் மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதையடுத்து பணி நிரந்தரம், பணி பாதுகாப்பு, நிறுத்தப்பட்ட ஊக்கத்தொகையை நிலுவையுடன் வழங்க வேண்டும், அனைத்து கடை ஊழியர்களுக்கும் பொருந்தக்கூடிய, வெளிப்படையான சுழற்சி முறை பணியிட மாறுதலை ஆண்டுக்கு ஒரு முறை செய்ய வேண்டும், கடை ஆய்வு மற்றும் தணிக்கைக்கென தனியான வழிகாட்டுதல் விதிகள் உருவாக்கப்பட வேண்டும் என்பன உள்பட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 8, 9-ந்தேதிகளில் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம்.
இதில் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள், உதவி விற்பனையாளர்கள் என மொத்தம் 27 ஆயிரம் பேர் கலந்துகொள்கிறார்கள். 6 ஆயிரம் கடைகளும் 2 நாட்கள் திறக்கப்படாமல் மூடப்பட்டிருக்கும். இந்த வேலை நிறுத்தத்தில் 11 தொழிற்சங்கங்கள் இணைந்து பங்கேற்கிறது.
இவ்வாறு அவர் கூறினார். #TasmacShop #Tamilnadu
தமிழ்நாடு டாஸ்மாக் தொ.மு.ச. தலைவர் ராஜவேல் நேற்று விழுப்புரத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் கடந்த 2003-ம் ஆண்டு பணியில் சேர்ந்த டாஸ்மாக் ஊழியர்களை இதுநாள் வரையிலும் பணிநிரந்தரம் செய்யவில்லை. 480 நாட்கள் வேலைக்குச்சென்றாலே பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று விதிமுறை உள்ளது. இதுகுறித்து பலமுறை தமிழக அரசிடம் மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதையடுத்து பணி நிரந்தரம், பணி பாதுகாப்பு, நிறுத்தப்பட்ட ஊக்கத்தொகையை நிலுவையுடன் வழங்க வேண்டும், அனைத்து கடை ஊழியர்களுக்கும் பொருந்தக்கூடிய, வெளிப்படையான சுழற்சி முறை பணியிட மாறுதலை ஆண்டுக்கு ஒரு முறை செய்ய வேண்டும், கடை ஆய்வு மற்றும் தணிக்கைக்கென தனியான வழிகாட்டுதல் விதிகள் உருவாக்கப்பட வேண்டும் என்பன உள்பட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 8, 9-ந்தேதிகளில் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம்.
இதில் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள், உதவி விற்பனையாளர்கள் என மொத்தம் 27 ஆயிரம் பேர் கலந்துகொள்கிறார்கள். 6 ஆயிரம் கடைகளும் 2 நாட்கள் திறக்கப்படாமல் மூடப்பட்டிருக்கும். இந்த வேலை நிறுத்தத்தில் 11 தொழிற்சங்கங்கள் இணைந்து பங்கேற்கிறது.
இவ்வாறு அவர் கூறினார். #TasmacShop #Tamilnadu
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X