search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பண்ருட்டியில் பஸ்களை சேதப்படுத்திய 2 வாலிபர்கள் குண்டர் சட்டத்தில் கைது
    X

    பண்ருட்டியில் பஸ்களை சேதப்படுத்திய 2 வாலிபர்கள் குண்டர் சட்டத்தில் கைது

    பண்ருட்டியில் அரசு மற்றும் தனியார் பஸ்களை சேதப்படுத்திய 2 வாலிபர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
    பண்ருட்டி:

    பண்ருட்டியில் இருந்து நெய்வேலி நோக்கி கடந்த மாதம் 11-ந் தேதி மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர்கள் எதிரே வந்த அரசு மற்றும் தனியார் பஸ்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதில் 10 பஸ்களின் முன் பக்ககண்ணாடி உடைந்து சேதம் அடைந்தது.

    இதுபற்றி காடாம்புலியூர், முத்தாண்டிக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நெய்வேலி மாற்று குடியிருப்பை சேர்ந்த சத்யராஜ் (வயது 23), சிவசங்கர் (22) ஆகியோரை காடாம்புலியூர் இன்ஸ்பெக்டர் மலர்விழி கைது செய்து பண்ருட்டி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினார். பின்னர் அவர்கள் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இந்நிலையில் இவர்களின் குற்ற செயலை கட்டுப்படுத்தும் பொருட்டு கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் பரிந்துரையின் பேரில் அவர்கள் 2 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் அன்புச்செல்வன் உத்தரவிட்டார்.
    Next Story
    ×