என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருநாவலூர் அருகே முன்விரோதத்தில் விவசாயி அடித்து கொலை?- போலீசார் விசாரணை
Byமாலை மலர்4 Jan 2019 11:57 AM GMT (Updated: 4 Jan 2019 11:57 AM GMT)
திருநாவலூர் அருகே முன்விரோதத்தில் விவசாயி அடித்து கொலை செய்யப்பட்டரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருநாவலூர்:
விழுப்புரம் மாவட்டம் திருநாவலூர் அருகே உள்ள பெரும்பாக்கம் காலனியை சேர்ந்தவர் சந்திரசேகர். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த விவசாயி சாமிக்கண்ணு (வயது 75) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சந்திரசேகர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை தொடர்ந்து சந்திரசேகர் குடும்பத்தினருக்கும், சாமிக்கண்ணு குடும்பத்தினருக்கும் இடையே மீண்டும் முன்விரோதம் ஏற்பட்டது.
நேற்று மாலையில் சந்திரசேகரின் குடும்பத்தினர் சாமிக்கண்ணுவிடம் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது.
அப்போது அவர்கள் ஆபாசமாக பேசி சாமிக்கண்ணுவை தாக்கியதாக தெரிகிறது. பின்னர் அவர்கள் அங்கிருந்து சென்று விட்டனர். வீட்டுக்கு வந்த சாமிக்கண்ணுக்கு திடீரென்று நெஞ்சி வலி ஏற்பட்டது.
உடனே அவரை வீட்டில் இருந்தவர்கள் உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரது உடலை பரிசோதித்த டாக்டர்கள் சாமிக்கண்ணு ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.
இதை கேட்டதும் அவர்கள் கதறி அழுதனர். இது குறித்து சாமிக்கண்ணுவின் மகன் விபூஷ்ணு திருநாவலூர் போலீசில் புகார் செய்துள்ளார். அதில் எங்கள் குடும்பத்துக்கும், சந்திரசேகர் குடும்பத்துக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. அவர்கள் எனது தந்தையிடம் தகராறு செய்து அடித்து தாக்கியுள்ளனர். இதனால் அவர் இறந்து விட்டார்.
இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று கூறியுள்ளார். அதன்பேரில் சப்- இன்ஸ்பெக்டர் பரணி நாதன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார். பெரும்பாக்கம் காலனி பகுதியில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. அதில் பதிவான காட்சிகளை வைத்து சாமிக்கண்ணுவை அடித்து கொலை செய்தார்களா? அல்லது அவரது சாவில் வேறுஏதேனும் காரணம் உண்டா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இறந்துப்போன சாமிக்கண்ணுக்கு, ராணி, சாரதம்மாள் ஆகிய 2 மனைவிகள் உள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் திருநாவலூர் அருகே உள்ள பெரும்பாக்கம் காலனியை சேர்ந்தவர் சந்திரசேகர். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த விவசாயி சாமிக்கண்ணு (வயது 75) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சந்திரசேகர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை தொடர்ந்து சந்திரசேகர் குடும்பத்தினருக்கும், சாமிக்கண்ணு குடும்பத்தினருக்கும் இடையே மீண்டும் முன்விரோதம் ஏற்பட்டது.
நேற்று மாலையில் சந்திரசேகரின் குடும்பத்தினர் சாமிக்கண்ணுவிடம் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது.
அப்போது அவர்கள் ஆபாசமாக பேசி சாமிக்கண்ணுவை தாக்கியதாக தெரிகிறது. பின்னர் அவர்கள் அங்கிருந்து சென்று விட்டனர். வீட்டுக்கு வந்த சாமிக்கண்ணுக்கு திடீரென்று நெஞ்சி வலி ஏற்பட்டது.
உடனே அவரை வீட்டில் இருந்தவர்கள் உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரது உடலை பரிசோதித்த டாக்டர்கள் சாமிக்கண்ணு ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.
இதை கேட்டதும் அவர்கள் கதறி அழுதனர். இது குறித்து சாமிக்கண்ணுவின் மகன் விபூஷ்ணு திருநாவலூர் போலீசில் புகார் செய்துள்ளார். அதில் எங்கள் குடும்பத்துக்கும், சந்திரசேகர் குடும்பத்துக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. அவர்கள் எனது தந்தையிடம் தகராறு செய்து அடித்து தாக்கியுள்ளனர். இதனால் அவர் இறந்து விட்டார்.
இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று கூறியுள்ளார். அதன்பேரில் சப்- இன்ஸ்பெக்டர் பரணி நாதன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார். பெரும்பாக்கம் காலனி பகுதியில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. அதில் பதிவான காட்சிகளை வைத்து சாமிக்கண்ணுவை அடித்து கொலை செய்தார்களா? அல்லது அவரது சாவில் வேறுஏதேனும் காரணம் உண்டா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இறந்துப்போன சாமிக்கண்ணுக்கு, ராணி, சாரதம்மாள் ஆகிய 2 மனைவிகள் உள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X