search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கன்னியாகுமரியில் கடல் சீற்றம் - 3வது நாளாக படகு போக்குவரத்து பாதிப்பு
    X

    கன்னியாகுமரியில் கடல் சீற்றம் - 3வது நாளாக படகு போக்குவரத்து பாதிப்பு

    கன்னியாகுமரியில் கடல் சீற்றம் காரணமாக 3வது நாளாக படகு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. படகு சவாரிக்கு காத்திருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரியில் தற்போது சபரிமலை ஐயப்ப பக்தர்கள் சீசன் நடந்து வருகிறது. சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் சுற்றுலாதலமான கன்னியாகுமரியில் குவிந்து வருகிறார்கள்.

    அவர்கள் காலையில் சூரிய உதயம், மாலையில் சூரிய அஸ்தமனத்தை கண்டு ரசித்து செல்கிறார்கள். மேலும் கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்துக்கும் படகில் சென்று பார்த்து வருகிறார்கள்.

    இந்தநிலையில் கடந்த சில நாட்களாக கன்னியாகுமரி கடலில் ஏற்படும் மாற்றம் காரணமாக படகு போக்குவரத்தை சீராக இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நேற்றும், அதற்கு முந்திய நாளும் கடலில் சீற்றம் அதிகமாக இருந்ததால் படகு போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகளும், ஐயப்ப பக்தர்களும் விவேகானந்தர் மண்டபத்துக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

    இன்று காலை கடல் சீற்றம் சற்று தணிந்ததை தொடர்ந்து 8 மணிக்கு விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து தொடங்கியது. 10 மணி அளவில் கடல் அலையில் மாற்றம் ஏற்பட்டு சீற்றமாக இருந்தது. இதனால் படகு போக்குவரத்து உடனடியாக நிறுத்தப்பட்டது. படகு சவாரிக்கு காத்திருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.


    Next Story
    ×