search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உளுந்தூர்பேட்டையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டருக்கு மிரட்டல் - 6 பேர் கைது
    X

    உளுந்தூர்பேட்டையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டருக்கு மிரட்டல் - 6 பேர் கைது

    உளுந்தூர்பேட்டையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டருக்கு மிரட்டல் விடுத்தது தொடர்பாக 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
    உளுந்தூர்பேட்டை:

    உளுந்தூர்பேட்டை போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் காந்தி மற்றும் போலீசார் உளுந்தூர்பேட்டை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது உளுந்தாண்டார் கோவில் பகுதியை சேர்ந்த சிலர், அங்கு புத்தாண்டு பண்டிகையையொட்டி மதுகுடித்து விட்டு தகராறில் ஈடுபட்டிருந்ததாக தெரிகிறது. இதை பார்த்த போலீசார் அவர்களை அங்கிருந்து செல்லுமாறு எச்சரித்தனர். ஆனால் அவர்கள் தொடர்ந்து தகராறில் ஈடுபட்டு வந்தனர்.

    இதை கண்டித்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் காந்தியை, அவர்கள் மிரட்டியதாக தெரிகிறது. இதையடுத்து சிறப்பு சப்-இன்ஸ்பெக்டருக்கு மிரட்டல் விடுத்ததாகவும், போலீசார்களை அரசு பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும், உளுந்தாண்டார் கோவில் பகுதியை சேர்ந்த சாதிக்(வயது 22), பரசுராமன்(27) செல்வராஜ்(20), மணிகண்டன்(26) நமச்சிவாயம்(35), தெய்வசிகாமணி(24) ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    Next Story
    ×