search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஈரோடு மாவட்டத்தில் புத்தாண்டு அன்று ரூ.3.40 கோடிக்கு மது விற்பனை
    X

    ஈரோடு மாவட்டத்தில் புத்தாண்டு அன்று ரூ.3.40 கோடிக்கு மது விற்பனை

    ஈரோடு மாவட்டத்தில் புத்தாண்டு அன்று ரூ 3.40 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை ஆகியுள்ளது. கடந்த ஆண்டு ரூ 2.90 கோடிக்கு தான் விற்பனையாகி இருந்தது. இந்த ஆண்டு கடந்த ஆண்டை விட ரூ 50 லட்சம் அதிகம்.
    ஈரோடு:

    பண்டிகை என்றாலே தற்போது மது அருந்திவிட்டு கொண்டாட வேண்டும் என்ற நிலையாகிவிட்டது குறிப்பாக ஒரு சிலர் இளைஞர்கள் எந்த ஒரு பண்டிகை என்றாலும் மது அருந்துவதை கெளரவமாகக் கருதுகின்றனர்.

    ஒவ்வொரு வருடமும் புத்தாண்டு தீபாவளி பொங்கல் பண்டிகையையொட்டி குடிமகன்கள் மதுபானங்களை விரும்பி அருந்துவார்கள்.

    அதன்படி புத்தாண்டுக் கொண்டாட்டத்திற்காக மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளில் குடிமகன்கள், இளைஞர்கள் குவிந்தனர்.

    தங்களுக்கு பிடித்தமான பீர் ரம் ஒயின் போன்றவற்றை வாங்கி அருந்தினார்.

    புத்தாண்டில் மட்டும் ரூ.3.40 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை ஆகியுள்ளது. இதுகுறித்து ஈரோடு டாஸ்மாக் மேலாளர் ரங்க நாதன் கூறியதாவது:-

    இந்த ஆண்டு புத்தாண்டையொட்டி ஈரோடு மாவட்டம் முழுவதும் மது பிரியர்களுக்கு தங்களுக்கு விருப்பமான மது வகைகளை வாங்கி அருந்தியுள்ளனர்.

    இந்த ஆண்டு ரூ 3.40 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை ஆகியுள்ளது. கடந்த ஆண்டு ரூ 2.90 கோடிக்கு தான் விற்பனையாகி இருந்தது. இந்த ஆண்டு கடந்த ஆண்டை விட ரூ 50 லட்சம் அதிகம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×