search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கூடலூரில் திடீர் சோதனை- பிளாஸ்டிக் பைகள் விற்றவர்களுக்கு அபராதம்
    X

    கூடலூரில் திடீர் சோதனை- பிளாஸ்டிக் பைகள் விற்றவர்களுக்கு அபராதம்

    கூடலூர் நகர் பகுதியில் நகராட்சி ஆணையாளர் மற்றும் சுகாதார அலுவலர்கள் திடீர் சோதனை நடத்தி தடை செய்யப்பட்ட பாலித்தீன் பைகள் விற்றவர்களுக்கு ரூ.12 ஆயிரத்து 500 அபராதம் விதித்ததனர்.

    கூடலூர்:

    கூடலூர் நகரம் உள்பட மாவட்டம் முழுவதும் பாலித்தீன் பைகள் விற்பனை செய்யுவும், ஓட்டல்கள், டீக்கடைகளில் பயன்படுத்தவும் நேற்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையை மீறி பாலித்தீன் பைகள் விற்பனை மட்டும் பயன்பாடு தொடர்ந்து உள்ளதா? என நகராட்சி ஆணையாளர் சத்தியநாதன் தலைமையில் பொறியாளர் சிவக்குமார், கம்பம் வருவாய் அலுவலர் பரமசிவம், நகராட்சி சுகாதார அலுவலர் ரவிச்சந்திரன், சுகாதார உதவியளர்கள் குமார், தினே‘ மற்றும் துப்புரவு தொழிலாளர்கள் கொண்ட குழுவினர் கடைகள், ஓட்டல்கள், டீக்கடைகளில் சோதனை நடத்தினார்கள். 

    அப்போது கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்த பாலித்தீன் பைகள், டீக்கடைகளில் வைக்கப்பட்டிருந்த டீக்கப்புகள் பறிமுதல் செய்யப்பட்டது. அதன் மதிப்பு ரூ.50 ஆயிரம் ஆகும். தடை செய்யப்பட்ட பாலித்தீன் பைகள் விற்ற 4 பேருக்கு ரூ.12 ஆயிரத்து 500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×