search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஓசூர் அருகே விபத்து - பெங்களூரு வியாபாரி பலி
    X

    ஓசூர் அருகே விபத்து - பெங்களூரு வியாபாரி பலி

    ஓசூர் அருகே மோட்டார்சைக்கிளில் சென்ற போது ஏற்பட்ட விபத்தில் பெங்களூரு வியாபாரி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள நாகதாசம்பட்டி பகுதியை சேர்ந்தவர் எல்லப்பன் (வயது55). வியாபாரியான இவர் பெங்களூருவில் தங்கி பழைய பேப்பர் வியாபாரம் செய்தார்.

    நேற்று அதிகாலை பெங்களூருவில் இருந்து சொந்த ஊருக்கு மொபட்டில் வந்தார். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த ஒன்னல்வாடி அருகே தொரப்பாடி பிரிவு ரோட்டில் வந்தபோது மொபட்டில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்தார்.

    இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவர் முதலில் ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். பின்னர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு நேற்று மாலை சிகிச்சை பலனின்றி இறந்து போனார்.

    இந்த விபத்து குறித்து ஓசூர் டவுன் போலீசார் விசாரித்து வருகிறார்கள். விபத்தில் இறந்த வியாபாரி எல்லப்பனுக்கு மனைவியும், 3 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். #tamilnews
    Next Story
    ×