என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பட்டதாரி வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை
Byமாலை மலர்2 Jan 2019 11:32 AM GMT (Updated: 2 Jan 2019 11:32 AM GMT)
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே குடும்ப தகராறு காரணமாக பட்டதாரி வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தருமபுரி:
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே உள்ள பாளையம்புதூரை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி பவளக்கொடி. இவர்களுக்கு வெற்றிவேல் (வயது 23), விக்னேஷ் ஆகிய 2 மகன்கள் உள்ளனர். முருகன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். பட்டதாரியான வெற்றிவேல் கூலி வேலைக்கு சென்று வந்தார். வெற்றிவேலுக்கும், அவரது தாய்க்கும் இடையே குடும்ப தகராறு இருந்தது தெரியவந்தது. இதனால் அவர் மனமுடைந்து காணப்பட்டார்.
நேற்று இரவு வெற்றிவேல் சாப்பிட்டுவிட்டு, பின்னர் தூங்க சென்றார். அவரது அறையின் கதவு மூடி இருந்தது. இன்று காலை நீண்ட நேரமாகியும் கதவை திறக்கவில்லை. உடனே சந்தேகம் அடைந்த தாய், தம்பி கதவை தட்டினர். ஜன்னல் வழியாக எட்டி பார்த்தபோது வெற்றிவேல் தூக்கில் பிணமாக தொங்கினார்.
இதுகுறித்து தொப்பூர் போலீசார் தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்து வெற்றிவேல் உடலை கைப்பற்றி தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
குடும்ப தகராறு காரணமாக வெற்றிவேல் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாரா? என்ற பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே உள்ள பாளையம்புதூரை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி பவளக்கொடி. இவர்களுக்கு வெற்றிவேல் (வயது 23), விக்னேஷ் ஆகிய 2 மகன்கள் உள்ளனர். முருகன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். பட்டதாரியான வெற்றிவேல் கூலி வேலைக்கு சென்று வந்தார். வெற்றிவேலுக்கும், அவரது தாய்க்கும் இடையே குடும்ப தகராறு இருந்தது தெரியவந்தது. இதனால் அவர் மனமுடைந்து காணப்பட்டார்.
நேற்று இரவு வெற்றிவேல் சாப்பிட்டுவிட்டு, பின்னர் தூங்க சென்றார். அவரது அறையின் கதவு மூடி இருந்தது. இன்று காலை நீண்ட நேரமாகியும் கதவை திறக்கவில்லை. உடனே சந்தேகம் அடைந்த தாய், தம்பி கதவை தட்டினர். ஜன்னல் வழியாக எட்டி பார்த்தபோது வெற்றிவேல் தூக்கில் பிணமாக தொங்கினார்.
இதுகுறித்து தொப்பூர் போலீசார் தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்து வெற்றிவேல் உடலை கைப்பற்றி தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
குடும்ப தகராறு காரணமாக வெற்றிவேல் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாரா? என்ற பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X