என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
முதுமலை வனப்பகுதியை குட்டி விமானம் மூலம் படம் பிடித்தவருக்கு ரூ. 20 ஆயிரம் அபராதம்
Byமாலை மலர்2 Jan 2019 9:56 AM GMT (Updated: 2 Jan 2019 9:56 AM GMT)
நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை வனப்பகுதியை குட்டி விமானம் மூலம் படம் பிடித்தவருக்கு வனத்துறையினர் ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்தனர். #MudumalaiForest
கூடலூர்:
நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகத்துக்குள் பொதுமக்கள் அத்துமீறி செல்லவும், வனவிலங்குகளுக்கு தொந்தரவு செய்யவும் வனத்துறையினர் தடை விதித்து உள்ளனர். மேலும் அத்து மீறி நுழைபவர்களை கண்காணித்தும் வருகின்றனர்.
குறிப்பாக விடுமுறை நாட்களில் முதுமலைக்கு வரும் சுற்றுலா பயணிகள் யாரேனும் சாலை ஓரங்களில் வாகனங்களை நிறுத்தி கீழே இறங்குகிறார்களா? வனப்பகுதியில் சமையல் செய்கிறார்களா? வனவிலங்குகளை புகைப்படம் எடுத்து தொந்தரவு செய்கிறார்களா? என்பதை கண்காணிக்க சிறப்பு குழுக்களும் அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் தொடர் விடுமுறை காரணமாக முதுமலையை சுற்றி பார்க்க கடந்த சில நாட்களில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்தனர். அவ்வாறு வந்த சுற்றுலா பயணிகள் மசின குடியில் உள்ள தனியார் விடுதிகளில் தங்கி சுற்றிப்பார்த்து சென்றனர்.
முதுமலையை சுற்றி பார்க்க வந்த பெங்களுருவை சேர்ந்த அனிஸ் சதாநந்தன் (வயது 39) என்பவர் வாழைத்தோட்டத்தில் உள்ள தனது நண்பர் ஒருவரின் வீட்டில் கடந்த 2 நாட்களாக தங்கி இருந்தார். அவர் தன்னிடம் இருந்த குட்டி விமானத்தை பறக்கவிட்டு புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட சிங்காரா வனபகுதியை படம் பிடித்துள்ளார்.
அப்போது அந்த வழியாக சென்ற சிங்காரா வனத்துறை ஊழியர்கள் வனப்பகுதியில் ஆளில்லா குட்டி விமானம் பறப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். மேலும், விமானத்தை பறக்கவிட்ட அனிஸ் சதாநந்தனை மடக்கி பிடித்து குட்டி விமானத்தையும் பறிமுதல் செய்தனர்.
அதனை தொடர்ந்து அவரை மசினகுடியில் உள்ள சிங்காரா வனச்சரக அலுவலகத்துக்கு அழைத்து சென்றனர். பின்னர் ஆளில்லா குட்டி விமானத்தை பறக்கவிட்டு வனப்பகுதியை படம் பிடித்ததற்காக அனிஸ் சதாநந்தனுக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து முதுமலை புலிகள் காப்பக வெளிமண்டல துணை கள இயக்குனர் புஷ்பாகரன் உத்தரவிட்டார். அந்த அபராத தொகையை அனிஸ் சதாநந்தன் செலுத்திய பின்னர் அவரை எச்சரித்து வனத்துறையினர் விடுவித்தனர். #MudumalaiForest
நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகத்துக்குள் பொதுமக்கள் அத்துமீறி செல்லவும், வனவிலங்குகளுக்கு தொந்தரவு செய்யவும் வனத்துறையினர் தடை விதித்து உள்ளனர். மேலும் அத்து மீறி நுழைபவர்களை கண்காணித்தும் வருகின்றனர்.
குறிப்பாக விடுமுறை நாட்களில் முதுமலைக்கு வரும் சுற்றுலா பயணிகள் யாரேனும் சாலை ஓரங்களில் வாகனங்களை நிறுத்தி கீழே இறங்குகிறார்களா? வனப்பகுதியில் சமையல் செய்கிறார்களா? வனவிலங்குகளை புகைப்படம் எடுத்து தொந்தரவு செய்கிறார்களா? என்பதை கண்காணிக்க சிறப்பு குழுக்களும் அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் தொடர் விடுமுறை காரணமாக முதுமலையை சுற்றி பார்க்க கடந்த சில நாட்களில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்தனர். அவ்வாறு வந்த சுற்றுலா பயணிகள் மசின குடியில் உள்ள தனியார் விடுதிகளில் தங்கி சுற்றிப்பார்த்து சென்றனர்.
முதுமலையை சுற்றி பார்க்க வந்த பெங்களுருவை சேர்ந்த அனிஸ் சதாநந்தன் (வயது 39) என்பவர் வாழைத்தோட்டத்தில் உள்ள தனது நண்பர் ஒருவரின் வீட்டில் கடந்த 2 நாட்களாக தங்கி இருந்தார். அவர் தன்னிடம் இருந்த குட்டி விமானத்தை பறக்கவிட்டு புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட சிங்காரா வனபகுதியை படம் பிடித்துள்ளார்.
அப்போது அந்த வழியாக சென்ற சிங்காரா வனத்துறை ஊழியர்கள் வனப்பகுதியில் ஆளில்லா குட்டி விமானம் பறப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். மேலும், விமானத்தை பறக்கவிட்ட அனிஸ் சதாநந்தனை மடக்கி பிடித்து குட்டி விமானத்தையும் பறிமுதல் செய்தனர்.
அதனை தொடர்ந்து அவரை மசினகுடியில் உள்ள சிங்காரா வனச்சரக அலுவலகத்துக்கு அழைத்து சென்றனர். பின்னர் ஆளில்லா குட்டி விமானத்தை பறக்கவிட்டு வனப்பகுதியை படம் பிடித்ததற்காக அனிஸ் சதாநந்தனுக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து முதுமலை புலிகள் காப்பக வெளிமண்டல துணை கள இயக்குனர் புஷ்பாகரன் உத்தரவிட்டார். அந்த அபராத தொகையை அனிஸ் சதாநந்தன் செலுத்திய பின்னர் அவரை எச்சரித்து வனத்துறையினர் விடுவித்தனர். #MudumalaiForest
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X