search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜெயங்கொண்டம் அருகே ஓய்வு பெற்ற ராணுவவீரர் வீட்டில் கொள்ளை
    X

    ஜெயங்கொண்டம் அருகே ஓய்வு பெற்ற ராணுவவீரர் வீட்டில் கொள்ளை

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே ஓய்வுபெற்ற ராணுவ வீரர் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து நகை மற்றும் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகேயுள்ள உட்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் நடராஜன் (வயது 55). ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற இவர் தற்போது திருச்சி அண்ணா பல்கலைக்கழகத்தில் செக்யூரிட்டி மேலாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பானு. இவர்களது மகன் தமிழரசன்.

    இந்த நிலையில் நேற்று நடராஜன் வழக்கம்போல் வேலைக்கு சென்று விட்டார். பானுவும், தமிழரசனும் வீட்டை பூட்டிவிட்டு தஞ்சையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றனர். மாலையில் தமிழரசன் மட்டும் வீடு திரும்பினார். வீட்டை திறந்து உள்ளே சென்ற அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

    வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. அறைக்குள் சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த 8 பவுன் தங்க நகை, 300 கிராம் வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.25 ஆயிரம் பணம் கொள்ளை போயிருந்தது.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஜெயங்கொண்டம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் மோப்ப நாயும், கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

    நகை கொள்ளை போனது பற்றி தமிழரசன் செல்போனில் தனது தாய் பானுவுக்கு தகவல் கொடுத்துள்ளார்.

    முதல் கட்ட விசாரணையில் புத்தாண்டு அன்று வீடு பூட்டி கிடப்பதை அறிந்த மர்ம நபர்கள் வீட்டின் பின் பக்க வழியாக வந்து பின் பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்து இந்த கொள்ளை ஈடுபட்டது தெரிய வந்தது. பட்டப்பகலில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×