search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வடகிழக்கு பருவமழை முடிவுக்கு வந்தது -  சென்னை வானிலை மையம்
    X

    வடகிழக்கு பருவமழை முடிவுக்கு வந்தது - சென்னை வானிலை மையம்

    வடகிழக்கு பருவமழை தமிழகம், புதுவை மற்றும் ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா மாநிலங்களில் இன்றுடன் முடிவுக்கு வந்ததாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. #NortheastMonsoon
    சென்னை:

    வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் இறுதியில் தொடங்கியது. தமிழகத்தில் சென்னை தவிர மற்ற இடங்களில் பரவலாக நல்ல மழை பெய்தது. கஜா புயல் டெல்டா மாவட்டங்களை தாக்கி சேதப்படுத்தியது. ஆனால் சென்னை மற்றும் வட மாவட்டங்களில் போதிய மழை இல்லை.

    இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை தமிழகம், புதுவை மற்றும் ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா மாநிலங்களில் இன்றுடன் முடிவுக்கு வந்ததாக சென்னை வானிலை மையம் அறிவித்தது.



    சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரியாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும். உள் மாவட்டங்களில் மூடு பனியும், ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைப்பிரதேசங்களில் உறை பனியும் நிலவும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. #NortheastMonsoon

    Next Story
    ×