என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நதிநீர் பிரச்சனையில் விவசாயிகளின் நலனை பாதுகாக்க சட்ட நடவடிக்கை- ஆளுநர் உரையில் உறுதி
Byமாலை மலர்2 Jan 2019 6:13 AM GMT (Updated: 2 Jan 2019 6:13 AM GMT)
நதிநீர் பிரச்சனையில் விவசாயிகளின் நலனை பாதுகாக்க அனைத்து சட்ட நடவடிக்கையும் எடுப்பதில் அரசு உறுதியாக உள்ளது என ஆளுநர் தெரிவித்தார். #TNAssembly #AssemblySession #WaterDispute
சென்னை:
தமிழக சட்டசபையில் இன்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றினார். அவரது உரையில் உள்ள சில அம்சங்களை பார்ப்போம்.
சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் குடிசைப் பகுதிகளை மேம்படுத்த புதிய திட்டம்.
ரூ.1,652 கோடியில் அத்திக்கடவு-அவிநாசி திட்டம் செயல்படுத்தப்படும். இத்திட்டத்தை முதல்வர் விரைவில் தொடங்கி வைப்பார்.
புதிய தொழில் முனைவோரை ஊக்குவிக்க புதிய கொள்கை விரைவில் வெளியிடப்பட உள்ளது.
பாதுகாப்பு தளவாட உற்பத்திக்காக புதிய தொழிற்கொள்கை விரைவில் வெளியிடப்படும்.
அடுத்த தலைமுறைக்கான மின்சார வாகனங்களை தயாரிப்பதற்கு சலுகைகள் வழங்க அரசு பரிசீலித்து வருகிறது.
பழங்குடியினரின் எழுத்தறிவு நிலை குறைவாக உள்ளது; எனவே கூடுதல் பள்ளிகள் அமைப்பதற்காக புதிய திட்டம்.
சென்ட்ரல் ரெயில் நிலையத்துக்கு எம்ஜிஆர் பெயர் வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும். தமிழக அரசின் கோரிக்கையை மத்திய அரசு சாதகமாக பரிசீலிக்கும் என நம்புகிறோம்.
அண்ணா, ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும்.
உச்சநீதிமன்ற உத்தரவினை வெளிப்படையாக மீறுவதாக மத்திய அரசின் செயல் அமைந்துள்ளது. நீர் பகிர்வு உரிமையை பாரபட்சமின்றி பகிர்ந்துகொள்ளும் வகையில் செயல்பட்டால் பிரச்சனைக்கு தீர்வு காணமுடியும்.
நீர்ப்பகிர்வு உரிமையை நிலைநிறுத்த மீண்டும் மீண்டும் சட்டநடவடிக்கை எடுக்கும் நிலைக்கு அரசு தள்ளப்படுகிறது. நதிநீர்ப் பிரச்சனையில் விவசாயிகளின் நலனை பாதுகாக்க அனைத்து சட்ட நடவடிக்கையும் எடுப்பதில் அரசு உறுதியாக உள்ளது.
இவ்வாறு கவர்னர் உரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. #TNAssembly #AssemblySession #WaterDispute
தமிழக சட்டசபையில் இன்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றினார். அவரது உரையில் உள்ள சில அம்சங்களை பார்ப்போம்.
சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் குடிசைப் பகுதிகளை மேம்படுத்த புதிய திட்டம்.
ரூ.1,652 கோடியில் அத்திக்கடவு-அவிநாசி திட்டம் செயல்படுத்தப்படும். இத்திட்டத்தை முதல்வர் விரைவில் தொடங்கி வைப்பார்.
புதிய தொழில் முனைவோரை ஊக்குவிக்க புதிய கொள்கை விரைவில் வெளியிடப்பட உள்ளது.
பாதுகாப்பு தளவாட உற்பத்திக்காக புதிய தொழிற்கொள்கை விரைவில் வெளியிடப்படும்.
அடுத்த தலைமுறைக்கான மின்சார வாகனங்களை தயாரிப்பதற்கு சலுகைகள் வழங்க அரசு பரிசீலித்து வருகிறது.
பழங்குடியினரின் எழுத்தறிவு நிலை குறைவாக உள்ளது; எனவே கூடுதல் பள்ளிகள் அமைப்பதற்காக புதிய திட்டம்.
தமிழகத்திற்கான ரூ.7669 கோடி வரி வருவாய் இதுவரை வழங்கப்படவில்லை. ஜிஎஸ்டி வரி வருவாயில் மாநில பங்கினை வழங்குவதில் மத்திய அரசு தாமதம் செய்கிறது.
அண்ணா, ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும்.
உச்சநீதிமன்ற உத்தரவினை வெளிப்படையாக மீறுவதாக மத்திய அரசின் செயல் அமைந்துள்ளது. நீர் பகிர்வு உரிமையை பாரபட்சமின்றி பகிர்ந்துகொள்ளும் வகையில் செயல்பட்டால் பிரச்சனைக்கு தீர்வு காணமுடியும்.
நீர்ப்பகிர்வு உரிமையை நிலைநிறுத்த மீண்டும் மீண்டும் சட்டநடவடிக்கை எடுக்கும் நிலைக்கு அரசு தள்ளப்படுகிறது. நதிநீர்ப் பிரச்சனையில் விவசாயிகளின் நலனை பாதுகாக்க அனைத்து சட்ட நடவடிக்கையும் எடுப்பதில் அரசு உறுதியாக உள்ளது.
இவ்வாறு கவர்னர் உரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. #TNAssembly #AssemblySession #WaterDispute
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X