search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவேற்காட்டில் குடோனில் பதுக்கிய ரூ. 3 லட்சம் குட்கா சிக்கியது - வியாபாரி கைது
    X

    திருவேற்காட்டில் குடோனில் பதுக்கிய ரூ. 3 லட்சம் குட்கா சிக்கியது - வியாபாரி கைது

    திருவேற்காட்டில் குடோனில் பதுக்கிய ரூ. 3 லட்சம் மதிப்பிலான குட்கா புகையிலை பறிமுதல் செய்யப்பட்டது.

    பூந்தமல்லி:

    திருவேற்காடு பகுதியில் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை விற்கப்படுவதாக போலீசாருக்கு ஏராளமான புகார்கள் வந்தன.

    தனிப்படை போலீசார் குட்கா விற்கப்படும் கடைகளை ரகசியமாக கண்காணித்து வந்தனர். இதில் திருவேற்காடு, சுந்தரசோழபுரம் விநாயகர் கோவில் தெருவில் உள்ள குடோனில் இருந்து குட்கா புகையிலை சப்ளை செய்யப்படுவது தெரிந்தது.

    இதைத் தொடர்ந்து தனிப் படை போலீசார் அந்த குடோனில் அதிரடியாக சோதனை நடத்தினர். அங்கு மூட்டை, மூட்டையாக குட்கா, புகையிலை பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இது தொடர்பாக குடோன் உரிமையாளர் வியாபாரி வீரமணியை போலீசார் கைது செய்தனர். மேலும் ரூ. 3 லட்சம் மதிப்பிலான குட்கா புகையிலை பறிமுதல் செய்யப்பட்டது.

    தடை செய்யப்பட்ட குட்கா பெங்களூரில் இருந்து கடத்தி வரப்பட்டதாக தெரிகிறது. இதில் தொடர்புடையவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×